Headlines

உஷார் ரிப்போர்ட் : உங்கள் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் புகைப்படங்கள் எடுக்கும் போது…!

மாயவரத்தான் கி ரமேஷ்குமார் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பிவிட்டார்கள். தற்போது கோடை விடுமுறைக்காக லண்டன் செல்ல எண்ணி, இலங்கை வழியாக பயணம் செய்திருக்கிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் பிரச்னை இல்லை.ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் அவரது இரண்டாவது மகளின் பாஸ்போர்ட்டினைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதில் புகைப்படத்தில் கன்னத்தில் வைத்திருந்த திருஷ்டிப் பொட்டினை மச்சம் என்று கருதி, அந்த மச்சம் இப்போது இல்லை. எனவே புகைப்படத்தில் இருக்கும் குழந்தையும், இங்கே…

Read More

இது தான் இஸ்லாம்….!! சாலை விபத்தில் பலியான மாற்று மத சகோதர்களுக்கும் உதவி!

பள்ளப்பட்டியை சேர்ந்த ஆலிம்கள் சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் அருகே விபத்திற்குள்ளாகி அனைவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அரசின் உதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள், ஜமாஅத்துல் உலமா சார்பாக வசூல் செய்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர். அரசு உதவி செய்யாவிட்டாலும் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ்வுடைய உதவி வந்ததால் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. அதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் (17.04.2015) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கும்…

Read More

மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் – பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவைக்கு நடுவே அமர்ந்திருந்தே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பில் இன்றே எமக்கு தீர்மானம் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடமைகள் சம்பந்தமாகவே அழைக்கப்பட்டுள்ளார். அது பிரச்சினையாக…

Read More

கோட்டாபயவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் சாதனை

றம்ஸீன் முஹம்மட் ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். கல்வியமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவு , ஸ்ரீலங்கா கணணி சம்மேளனம் , இலங்கை தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் ஆகியன கொழும்பு பல்கலைக்கழக கணணிப்பிரிவுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்திய தகவல் தொழில்நுட்பப்போட்டியில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் கே.எம்.எம்.அஸாம் ஹுசைன் ,…

Read More

ஒரு சமூகத்திற்கு மட்டும் இந்த நியமனத்தை வழங்குவதாக பிரசாரங்களை செய்தனர் -றிஷாத் பதியுதீன்

எமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்ங்கள் தொடர்பிலும் சகல சமூகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடியே அதனை செய்கின்றோம்.நாம் இவ்வாறான வெளிப்படைத்தன்மையினை பேனுவது எம்மில் இனவாத கொள்கையின்மையே ஆனால் சில அரசியல் கட்சிகள் அவர்கள் சார்ந்த மக்களை மட்டும் அழைத்து கலந்துரையாடுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் வடக்கு மக்களின் புரந் தியாகங்கள் இருப்பதாகவும் கூறினார். மன்னார்…

Read More

சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பபாடு செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (2015-04-18) வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வீடமைப்பு,சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு இந்த கௌரவப்பட்டங்களை வழங்கி வைத்தனர்..

Read More

சொந்த மண்ணுக்கு திரும்பும் விடத்தல்தீவு மக்கள்

சுஐப் எம் காசிம் மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ். நகர் செல்லும் கரையோரப் பாதையில் 15வது மைலில் அமைந்துள்ள அழகிய கிராமம் வித்தல்தீவு. கிராமத்தின் கிழக்கில் அமைந்த வன்னி மேட்டு நிலங்களில் பெய்யும் மழை நீர் ஆறாக உருவாகி ‘நாயாறு’ என்னும் பேராறாகப் பெருகிக் கிராமத்தைச் செழிப்படையச் செய்துள்ளது. இந்த ஆறு கிராமத்தின் வட, தென் எல்லைகளில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் சங்கமிக்கிறது. ஆற்றின் கழிமுகம் சிறந்த துறைமுகமாக விளங்குகிறது. கிராமத்தின் கிழக்கில் அமைந்த…

Read More

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

-கல்முனை சமீம்- நாட்டில் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற நம்பிக்கையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நடவடிக்கைகளை விரிவுபடு;த்துவதிலும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கூடிய கரிசணை காட்டி வருகின்றன. இந்நிலையானது கிழக்கில் சற்று சூடு பிடித்துள்ளது. இம் மாகாணத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தற்போதிருந்து தங்களது கட்சிகளின் தொகுதி மற்றும் மாவட்ட, பிரதேச மத்திய குழுக்களை…

Read More

நர்ஸாக மாறிய பூனை: நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கும் அதிசயம்

நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் அவற்றின் நோய் குணமாக உதவி செய்யும் அதிசய கருப்பு பூனை ஒன்று போலந்தில் உள்ளது. ராடேமேனேசா என்கிற அந்த கருப்பு பூனை போலந்தில் உள்ள ஒரு விலங்கு தங்குமிடத்தில் உள்ளது. இரண்டு மாத குட்டியாக இருக்கும் போது சுவாச பையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இந்த விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகு, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு நர்ஸை போல செயல்பட தொடங்கியது அந்த பூனை. விலங்கு…

Read More

மூக்கில்லாமல் பிறந்த குழந்தையின் படத்தை தவறுதலாக நீக்கிவிட்டதாக ஒப்புக்கொண்டது பேஸ்புக்

அலபாமாவை சேர்ந்த டிமோத்தி எலி தாம்சன் என்ற மூக்கில்லாத குழந்தையின் புகைப்படத்தை தவறுதலாக நீக்கியதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது. தங்களது சமூக தரத்தையோ, விளம்பர கொள்கைகளையோ மீறியதாக அப்புகைப்படம் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், அப்புகைப்படத்தை முதலில் ஆய்வு செய்தவர் தவறுதலாக ஆட்சேபித்ததால் அது அகற்றப்பட்டது. எனினும் புகைப்படத்தை வெளியிட்டவர் தரப்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டதால் உடனடியாக தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் அப்புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது மகனின்…

Read More