Headlines

தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் அங்கத்துவம் வகிக்கவில்லை : சோபித்த தேரர்

அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் இடம்பெறவில்லை. எனக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவுமில்லை. நான் இதுவரை அந்த குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் இல்லை என்று என்று சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற சமூக நீதிக்கான அமைப்பான நிபுணத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாறறிய சோபித்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேரர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நான் அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம்…

Read More

ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிவாசல்

ஆப்பிரிக்காவில் ஒரு ஏழை கிராமத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட இறையில்லம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்றைய மதினா மஸ்ஜிதுன் நபவியும் இவ்வாறு ஓலை குடிசையிலே கட்டப்பட்டது. அல்லாஹ் இந்த கிராம மக்கள் மீது நிறைந்து அருள் புரிவானாக….!!

Read More

மக்களின் பாதுகாப்புக்காக பட்ஜெட்டை உயர்த்தும் ஜேர்மன்

சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலைகளின் காரணமாக நாட்டு மக்கள் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் பட்ஜெட்டை உயர்த்த உள்ளதாக ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் Wolfgang Schaeuble, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் உறுதியற்ற நிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கொள்ளும் வகையில் நாட்டின் பாதுகாப்பிற்கு செலவிடப்படும் சராசரி தொகையை இன்னும் சில ஆண்டுகளில் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும், எந்த ஆண்டிலிருந்து, எவ்வளவு…

Read More

வயிறு ஒட்டிப் பிறந்த ஏமன் இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 9 மணி நேர ஆபரேசன்

ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், அப்துல்லா, அப்துல் ரகுமான் என்று பெயரிடப்பட்ட அந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்காக அவர்களின் பெற்றோர் சவுதி அரேபியாவிற்கு அழைத்து வந்தனர். பின்னர், அந்நாட்டு சுகாதார மந்திரி அப்துல்லா-அல்-ரபியாவின் வழிகாட்டுதலில், தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அசீஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள்…

Read More

முட்டை ஒன்றின் விலை ரூ.45 ஆயிரம்

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ஈபே-யில் ஒரு கோழியின் முட்டை ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில் செல்லமாக வளர்ந்து வந்த பிங் பாங் அதிசயமாக பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டது. ஆச்சர்யத்தில் வாயடைத்து போன கிம் இந்த முட்டையை ஆன்லைனில் விற்க முடிவு செய்தார். பின்னர் ஈபே-வெப்சைட்டில் விற்பனைக்கு விளம்பரம் செய்தார். அதை பார்த்து பலர் வாங்குவதற்கு…

Read More

இஸ்லாமுக்கு சேவையாற்றிய சொற்பொழிவாளர் ஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி மன்னர் கௌரவிப்பு

இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார். மன்னர் ஃபைசல் சர்வதேச பரிசு என்ற பெயரில் இஸ்லாமிய சேவை, இஸ்லாமிய கல்வி, அரபுமொழி மற்றும் இலக்கியம், மருத்துவம், அறிவியல்…

Read More

இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில்(EDB) இன்று 02/03/2015 நடைபெற்றது இதில் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், பொருளாதார விடயங்கள் அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறார்களுக்கான கல்வி போன்றவைகளையும் அமைச்சர் விளக்கினார்.இதில் EDB தலைவர்.மற்றும் வர்த்தக பிரிவு தலைவரும் கலந்து கொண்டனர்..

Read More

பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்ற பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் கலந்துக்கொண்டுபோது

Read More

இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ள மலேசியா!(படங்கள்)

ஊடகப் பிரிவு இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது! சமாதான சூழ்நிலையில் அதாவது யுத்தத்திற்குப் பின்னர் நாட்டை கட்டியெழுப்புதல், அபிவிருத்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது. இலங்கைக்கும் மலேசியாவுக்கு இடையிலான உறவு மிகவும் பலமானது. இந்த இரு தரப்பு உறவுகளும்; தொடர்ந்தும் பேணப்படும் என்று இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் தெரிவித்தார். நேற்று…

Read More

கல்விக்காக ஏங்கும் சிறார்களுக்கான சிறுவர் முன்பள்ளி திறப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹ்யான்,முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலையிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More