Headlines

ஐநா மனித உரிமை பேரவையின் 28 கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தனது உரையை நிகழ்த்தவுள்ளார். மேலும் இவ்விஜயத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைனுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளத என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி மார்ச் 6

க.பொ.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஆறாம் திகதி என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்திபெறாது உயர்தரம் தோற்றியுள்ள மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். க.பொ.த உயர் தரத்தில தோற்றுவதற்கு கணித பாட சித்தி கட்டாயமில்லை என்றாலும் தொழில் வாய்ப்பு- தொழிற்பயிற்சிகள்- கற்கை நெறிகள்- நிறுவனம் அல்லது வேறு தேவைகளுக்கு கணித பாடம் அவசியம் என்று கோரப்படும் பட்சத்தில் கணிதம் பாடச் சித்தி அவசியம் என்றும்…

Read More

ஜனாதிபதி நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார். மேலும் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழகத்தி 3 புதிய விடுதிகளையும் விளையாட்டுத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“ஜோதிடத்திலிருந்த நம்பிக்கை போய்விட்டது ” – மஹிந்த ராஜபக்ஸ

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்விதம் உதவியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமது நண்பர்கள் அல்ல. பாகிஸ்தான் எமக்கு அதிகம் உதவியது. விசேடமாக முஷாரப. எனது நாட்டுக்கும் உங்கள் நாட்டும் என்ன நடந்தது, இந்தியாவின்…

Read More

அமெரிக்க ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறிய பயங்கர பக்றீரியா

அமெரிக்க ஆய்வு கூடமொன்றிலிருந்து அதி பயங்கரமான , உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை பக்றீரியா வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Burkholderia pseudomallei’ என்றழைக்கப்படும் ஒரு வகை பக்றீரியாவே வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுலேன் தேசிய முதனிகள் ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் (Tulane National Primate Research Center) இருந்தே குறித்த பக்றீரியாவானது வெளியேறியுள்ளது. பக்றீரியா எவ்வாறு வெளியேறியது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதி உயர் பாதுகாப்பு கொண்ட குறித்த ஆராய்ச்சி நிலையத்தில் எவ்வாறு இச்சம்பவம் இடம்பெற்றது…

Read More

10 வருடத்தில் செய்ய முடியாதவற்றை 30 நாட்களில் செய்தோம்: பிரதமர்

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது, இளைஞர் யுவதிகளின் மனதில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம்’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ‘மனுசத் மினுசுன் பலயய்- ரட சுரகின் மஹா பவுரய்’ என்ற தொனிப்பொருளில், பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (28), கட்சியை…

Read More

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஈரானுக்கு எதிராக மசோதா ஜனாதிபதி ஒபாமா, நிராகரிக்க முடிவு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஒப்பந்தம் ஏற்பட்டு, ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டியது வரும். ஆனால், ஈரானுடன் செய்துகொள்கிற ஒப்பந்தத்தை அமெரிக்க பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு ஒபாமா அனுப்ப வேண்டும், ஈரான்…

Read More

எதிர் கட்சி தலைவரை கொன்றவருக்கு கடும் தண்டனை -ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கொன்றவர்களை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி கூறியுள்ளார்.  ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் (55). அதிபர் புடினின் நிர்வாகத்தில் ஏராளமான  முறைகேடுகள் நடைபெற்று வருவதாக போரிஸ் நெமட்சோவ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ரஷ்யாவில் அதிபர்…

Read More

கேரள மாநிலத்தில் நடுவானில் சிதறி விழுந்தது எரிகல்தான் விஞ்ஞானிகளின் முதல் கட்ட ஆய்வில் தகவல்

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது. இந்த நெருப்புக் கோளம் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி…

Read More

ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச

கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது. நான் எனது பொறுப்புக்களை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது நான் செய்த பணிகளை முன்னெடுப்பார்கள் எனக் கருதியே வீட்டுக்கு சென்றேன். நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிய காரணத்தினால் மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். நாம் அனைவரும் பௌத்த மத வழிமுறைகளை பின்பற்றினால் பௌத்த மதம்…

Read More

சீனாவிடம் இருந்து கடந்த அரசாங்கம் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்தப்படும்: மங்கள சமரவீர

பீஜிங்கில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிடம் இருந்து இலங்கையின் முன்னைய அரசாங்கம் பெற்ற பெருந்தொகை கடன் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசேடமாக பெறப்பட்டுள்ள இந்த கடனுக்கான வட்டி பற்றி மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். வெளிப்படை தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இலங்கையின் புதிய அரசாங்கம் இது தொடர்பாக கருத்துக்களை சீனாவுடன் பரிமாறிக் கொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சர்…

Read More

இந்திய வெளிவிவகார அமைச்சர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம்

இலங்கை வரும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் சுஷ்மா வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Read More