Headlines

தமது இனத்தவர்களுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் ஹக்கீமிடம் ஆதிவாசி தலைவர் கோரிக்கை

முகம்மட் பஹாத் ஹெனானிகல ஆதிவாசிகளின் மறைந்த தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தோவின் புதல்வர்நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (11) பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், வேடுவர் தலைவர் கேட்டுக்கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…

Read More

அரங்கச் செயற்றிடத்தில் 15ஆயிரம் பேர் பங்கேற்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் பல்வகைமை பற்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அறிவிக்கின்து. இம்முறை சுமார் 15 ஆயிரம் பேர் இலங்கை மக்கள் அரங்கத்தில் இடம்பெற்ற அளிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். மக்கள் அரங்கத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அமிக்சை பற்றிய சிந்தனைகள் சுமார் 30ஆயிரம் பேரிடம் சென்றிருப்பதை இறுதிக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக ஊடக மன்றம் மேலும் தெரிவிக்கின்றது. கிழக்கு, மத்திய மற்றும்…

Read More

வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்றப்படும் வரையில் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்க வேண்டும்-அத்து­ர­லியே ரத்ன தேரர்

நூறு நாட்கள் வேலைத்­திட்டம் என்­பது தேசிய அர­சாங்­கத்­திற்­கான பிர­சா­ரமே தவிர கோட்­பாடு அல்ல. மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப டும் வரையில் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பிரதித் தலை­வரும் தூய்­மைக்­கான நாளை அமைப்பின் தலை­வ­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதே தேசிய அரசின் பலம் எனவும் சுட்­டிக்­காட்­டினார். சமூக நீதிக்­கான மக்கள் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று…

Read More

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து பொலிஸ் துறையை மீளப் பெறுங்கள்-நிமல் சிறி­பால டி. சில்வா

பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னை­யின்றி சட்டம் மற்றும் சமா­தானம் தொடர்­பான அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­ தன்னிச்சையாக பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்றம் செய்­து­வ­ரு­கிறார். எனவே, அவ­ரிடம் இருந்து பொலிஸ் துறையை மீளப்­பெ­று­மாறு ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்­து­கின்றோம் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார். கிறிஸ்­தவ விவ­காரம் மற்றும், அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சைக் கொடுத்­து­விட்டு பொலிஸ்­து­றையை மீளப்­பெ­று­மாறு மீளப்­பெ­று­மாறு கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர்…

Read More

நீர்கொழும்பு – வத்தளை பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் எங்கே?

இக்பால் அலி நீர்கொழும்பு மற்றும் வத்தளை நகர பகுதியில் பலகைக் கொட்டில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் மக்களுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்துத் தருமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த மக்களுடைய வீடற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து போராட்ட முன்னெடுப்புக்களை மேற் கொள்ளப் போவதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தடை செயய்யப்பட்ட சுனாமி எல்லைப்…

Read More

90களில் இருந்து பிசினஸ் செய்து வந்தவர் சிக்கினான்.. நீர்கொழும்பில் 400 இலட்சம் ரூபா ஹெரோயினுடன் சிக்கிய தந்தையும் மகனும்

ஐந்து கிலோகிராம் ஹெரோய்னுடன் பிரபல ​போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் சந்தேகநபரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சில தினங்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பிரதிபலனாக நேற்று (10) இந்த ​போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியில் தங்க நகை விற்பனை நிலையமொன்றிற்குள் இருந்​து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ​போது…

Read More

இலங்கையில் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் புகைத்தலை தடை செய்யவும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஊர்களில், முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தல் உற்பத்திப்பொருட்களையும் அதன் விற்பனையையும் நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றுமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி நகரசபை மேற்கொண்ட நடவடிக்கை போல ஏன் மற்றைய ஊர்களிலும் மேற்கொள்ள முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கும் இப்படையணி உள்ளுராட்சி சபைகளுக்கு தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் அதனை விற்கக்கூடாது என்ற சட்டத்தினை நிறைவேற்ற முடியும் ஆனால் பெரும்பாலான சபைகளின் தலைவர்களே இப்பழக்கத்திற்கு…

Read More

பெரும்பான்மை இன சிறுவனின் செவிப்புலனுக்கு உதவிய முஸ்லிம்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஐ.டி.என் செய்தி

அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி கொழும்பு கடற்கடை பிரதேசத்தில் வைத்து களவாடப்பட்டது. இது குறித்த செய்தியை ஐ.ரி.என், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதை பார்த்த முன்னாள் ஐ.ரி.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான இக்கருவியை அச்சிறுவனுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்ததுடன் நேற்று (11) ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில்…

Read More

புலிக் கொடிகளுடன் தம்மை எதிர்த்தவர்களை நோக்கி, கையசைத்த ஜனாதிபதி மைத்திரி

(பட உதவி – ஜனாதிபதி ஊடகப் பிரிவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில் காணலாம்.

Read More

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம்: இலண்டனில் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இலண்டனில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “வறுமையை ஒழித்து சுபீட்சம் மிகு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை களையப்படும். பயம்,…

Read More

அமைச்சர் றிஷாத் பிர­தமர் மோடியுடன் சந்திப்பு

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோக­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வரு­கின்­றமை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில்…

Read More

மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கடாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு  நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கடாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. கடார் தொழில்…

Read More