Headlines

அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்த அரச அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லைவட மாகாண முதலமைச்சருக்குஅமைச்சர் பதில்

வன்னி மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக எந்தவொரு அரச அதிகாரியும் ஈடுபடுத்தப் படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன், அவ்வாறான ஒரு கருத்தை எந்தவொரு அரச அதிகாரியும் கூறவும் மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது. வடமாகாண சபைத் தேர்தலின் போது அரசு வடக்கு ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் றிசாத்…

Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரக்கடன்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுவதற்கு கடனுதவித் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.எரிசக்தி மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமூவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெறுகிறது.மஹிந்த சிந்தனை தேசிய வேலை திட்டத்தின் கீழ் சகருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நடைமுறைபடுத்தும் நோக்கில் இந்த கடன் திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் ஒருவர் 40,000 ரூபாவை கடனாக பெற…

Read More

பேச்சுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முன்வைக்கவேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் பேச்சு நடத்து வதற்கு முன்னர் அரசியல் தீர்வுத்திட்ட வரைபை இதயசுத்தியுடன் அரசு முன் வைக்கவேண்டும் என்றும், பேச்சு நடத்த வேண்டும் என் பதற்காக பேசாது, தீர்வை விரைந்து காணும் வகையில் பேச்சு நடத்தவேண்டும் எனவும் அரச பங்காளிக்கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வலியுறுத்தியுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும், அப் பேச்சைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அதி உயர்பீடக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்…

Read More

பிரித்தானிய தம்பதியிடம் மன்னிப்பு கேட்ட சவூதி அரேபியா!

சவுதி அரேபியாவில் பொது இடங்களில் ஆணும், பெண்ணும் கலந்து பழகுவது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சவுதியில் ஷரியா சட்டத்தின் கீழ் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமிய அறநெறிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் நல்லொழுக்க மேம்பாட்டு ஆணையம் மற்றும் துணை தடுப்பு நிர்வாகம் என்னும் இஸ்லாமிய மத சம்பந்தப்பட்ட காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள வர்த்தக தொகுதியொன்றில் பெண்கள் மட்டும் வெளியேறும் வழி ஒன்றில் பிரித்தானிய பிரஜை ஒருவர்…

Read More

அபாயாவுக்குத் தொடர் சோதனை..!

-M.I.MUBARAK- முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத செயற்பாடுகளுள் முஸ்லிம் பெண்கள் முக்கிய குறியாகவே இருந்து வருகின்றனர். அவர்களின் ஆடைகளை இழிவு படுத்துவது, அவர்களின் செயற்பாடுகளுள் குறைகளைக் காண்பது, ஒழுக்க ரீதியாக அவர்களைச் சிதைப்பதற்கு முற்படுவது போன்ற பல்வேறு வகையான சதித்திட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் பேரினவாதிகள் முஸ்லிம் பெண்களை மிக மோசமாகச் சித்திரிக்கின்றனர்; ஏனைய இனங்களைச் சேர்ந்த பெண்களை விட முஸ்லிம் பெண்களே மோசமானவர்கள் என்ற பிரசாரங்கள் சமூக…

Read More

இலங்கையில் பாகிஸ்தானியர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அகதிகளுக்கான ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக  புகலிடம் கோரிய நிலையில் நீர்கொழும்பில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் மீண்டும் கைது செய்யப்படுவதாக பாகிஸ்தானியர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிரிஹானையில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது வரை 128 பேர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 56…

Read More

‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ காத்தான்குடியில் செயலமர்வு!

காத்தான்குடி அல் மனார் நிறுவனம் இம்முறை ஹஜ் செல்லவிருப்பவர்களின் நலன் கருதி ‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு அல் மனார், அர்ராஷித் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது. ஹஜ் நடைமுறைகளிலும் மற்றும் சவூதி சட்டதிட்டங்களில் நன்கு புலமை பெற்றவருமான ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி மற்றும் எம்.எம்.எம். மன்ஸூர் மதனி ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும். சகல ஹஜ் முகவர்கள்…

Read More

‘சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்’ : சரத் பொன்சேகா

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு…

Read More

பஸ்-முச்சக்கர வண்டி விபத்து! பயணித்த குடும்பம் படுகாயம்!

அப்துல்லாஹ் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்குச் சமீபமாக இன்று (04) வியாழன் மாலை 5 மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இ.போ.ச. கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த…

Read More

சுப்பிரமணிய சுவாமி படத்தை எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சுவாமி வீட்டு முன்பு வியாழக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரபிரசாத் தலைமையில் சென்றனர். அவர்களை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது படத்தை தீ வைத்து கொளுத்தினர்.

Read More

தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு சவுதியில் நீண்ட கால சிறைத் தண்டனை

புதன்கிழமை சவுதி அரேபியா தனது நாட்டில் தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு 2 முதல் 27 வருடங்கள் வரையிலான நீண்ட கால சிறைத் தண்டனை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஓர் அமெரிக்கரும் யேமென் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர் என சவுதியின் உத்தியோக பூர்வ செய்தி ஊடகமான SPA அறிவித்துள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட கைதிகள் சவுதியின் முக்கிய எண்ணெய் குழாய் வலையமைப்புக்களை அழிக்கத் திட்டம் வகுத்தமை, ஆயுதங்களைத் தாங்கியிருந்தமை, சவுதியிலும்…

Read More

அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை!

தற்கொலைகள் அதிகம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது. தர வரிசை அடிப்படையில் கயானா முதல் இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 44.2 சதவீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள வட கொரியாவில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 38.5 சதவீதமானோரும்…

Read More