Headlines

பொதுபல சேனாவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்

‘பொது பல சேனா முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும். விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு  போதும் வாழவுமில்லை  அவ்வாறு வாழப்போவதுமில்லை’ என்பதை மிகத்தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம். யுத்தம் நடைபெற்ற காலங்களில் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாத ஒரு கூட்டம் யுத்தம் நிறைவடைந்ததும், ஏதோ வீராதி வீரர்கள் போன்று வெளியில் வந்து கடந்த 02 வருடங்களாக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திகொண்டு இருக்கின்றார்கள். நாட்டின் அமைதியின்மையில் ஆதாயம் தேடும் சில…

Read More

பலசேனா – விராது தேரரின் கூட்டுக்கு இலங்கையில் ஒருபோதும் இடமில்லை

பொதுபல சேனா மற்றும் மியன்மாரின் 969 கூட்டு சட்ட விரோதமானது. இந்தக் கூட் டணியின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, இவ்விரு பெளத்த இனவாத அமைப்பு களும் இணைவதால் முஸ்லிம் கள் அச்சமடையத் தேவை யில்லை என்றும் தெரிவித்தார். இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பெளத்த அமைப்பான பொதுபல சேனா, சர்ச்சைக்குரிய 969 அமைப்பு டன் கைகோர்த்துள்ளது….

Read More

பலசேனாவின் அச்சுறுத்தல்: ஜனாதிபதி மஹிந்தவிடம் முறையீடு

பொதுபல சேனாவின் அச்சுறுத் தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ­விடம் முறைப்பாடு செய்துள்ளது. பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதி ராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய மியன்மார் பெளத்த பிக்கு அஸின் விராதுவிற்கு விசா வழங்கக்கூடாது என ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை அண்மையில் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பில் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ் லிம் பேரவைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விராது…

Read More

இலங்கை தொடர்பில் மீண்டும் ஆராய்கிறது மனிதவுரிமைக் குழு

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயலகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் குழு, ஜெனீவாவில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தமது அமர்வுகளை நடத்தவுள்ளது.இந்தநிலையில் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளதாக அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேபோன்று, புருண்டி,…

Read More

அரசியலில் குதிக்கிறார் ரஜினி?

சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற பரபரப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாஜக தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தையடுத்து பாஜகவில்…

Read More

ஜப்பானுக்கு செல்வதே எனது இலக்கு ; யாழில் முதலிடம் பெற்ற மாணவன்

ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றியதாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கபிசன் தெரிவித்தார்.மேலும் அவர் கருத்துதெரிவிக்கையில்,நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றினேன்.

Read More

பேஸ்புக் காதலால் பிக்கு கைது

பேஸ் புக்  ஊடாக 18 வயது யுவதியை காதலித்து ஏமாற்றிய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமாகி தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய பிக்குக்கு    எதிராக குறித்த யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர்.இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளார்.பௌத்த பிக்கு குறித்த யுவதியிடம் தம்மை சாதாரண ஓர்…

Read More

இலங்கையின் சூழ்ச்சியால் ஜெயலலிதா கைது.?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி இடம்பெற்றுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.அதில் பேசிய அவர்,சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. தீர்ப்பை நீதிபதி படித்தபோது, “நீங்கள் மக்கள் நம்பிக்கையை…

Read More

ஒக்ரோபர் 6 வரை ஜெயா சிறையில்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பிணை கேட்டு, ஜெயலலிதா தரப்பில், கர்நாடகா உயர் நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று கூடிய சிறப்பு அமர்வு, இந்த மனு மீது விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

பாடசாலை கதவினை அடைத்து வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எம்.ரீ.எம். பாரிஸ் /எம்.ரீ.எம். பஹத் / அஹமட் இர்ஸாட் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (29) திங்கட்கிழமை காலை பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையின் உயர் தர விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு, அருகாமையில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பாடசாலை மாணவர்கள் குற்றஞ்சாட்டி இவவார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனைப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நலன் கருதியே, இப்பாடசாலைகள் ஆண், பெண் பாடசாலை என வெவ்வேறாகப்…

Read More

இஞ்சி, மஞ்சல் பயிர் செய்கை வாகரை விவசாயிகளுக்கு வெற்றியளித்துள்ளது

எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் வாகரை வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எச்.ஆர். ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலில் வேள்ட் விசன் லங்கா நிறுவனத்தின் வாகரை பிராத்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புனானை கிழக்கு குகனேசபுரம், கேனிநகர் பிரதேசத்தில் கெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு இஞ்சி, மஞ்சல் பயிர் செய்கை செய்வதற்கான…

Read More

எரிசக்தி சேமிப்பு திட்டத்தினுடாக தொழிற்பேட்டைகள் 20% மின்வலு பயன்பாட்டை குறைக்க வேண்டும்’ – அமைச்சர் ரிஷாட்

இலங்கையின் பல உயர்மட்ட உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக மின்வலு தொழில்துறை முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த  வெற்றியின் விளைவாக, தற்போது இரண்டாவது மின்வலு உற்பத்திக்கான முயற்சியில் துணிகரமாக செயற்படுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டுவருகின்றது என  கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.   கடந்த வெள்ளிக்கிழமை (26.09.2014) கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 12ஆவது மின்வலு   சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி- 2014இன் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட்…

Read More