”இலங்கை முஸ்லிம்கள் பிறநாட்டு போராட்டங்களை, இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் கிடையாது”
-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு சிந்தனை முகாம்களில் இருந்தாலும் தங்களுக்குள் நிலவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தொடர்ந்தேர்ச்சியான பாரிய முரண்பாடுகளாகவோ, பிணக்குகளாகவோ குழுச்சண்டைகளாகவோ இதுவரை காலமும் வளர்த்துக் கொண்டதில்லை. இலங்கை முஸ்லிம்கள் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்கு மகத்தான பங்களிப்பினைச் செய்தவர்கள், தமது உரிமைகளுக்காக வன்முறையை நாடாது ஜனநயாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் வரலாறு நெடுகிலும் பங்கெடுத்தவர்கள், யுத்தமாயினும் சமாதானமாயினும் ஏனைய சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாது பாரிய விலையை செலுத்தியவர்கள், தேசிய…
