Headlines

விக்டோரியா நீர்மின் நிலைய இயந்திரங்களும் பழையவை

விக்டோரியா மின்நிலையத்தில் 3 மின்னுற்பத்தி இயந்திரங்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வியந்திரங்கள் 30 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்றும் அவற்றிலிருந்து உயரிய பயனைப் பெற வேண்டுமாயின் அவற்றை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

Read More

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம்

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மின்சாரத் தடை காரணமாக நேற்று 17 நிமிடங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன்படி, நேற்று (16) காலை 9.58 முதல் 10.15 மணி வரையில் 17 நிமிடங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த 17 நிமிடங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எவ்வித தடையும் இன்றி பங்குச் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மின்சார தடைக்கான காரணம் கசிந்தது

– எம்.ஆர்.எம்.வஸீம் – மின்சார தடையானது அரசாங்கத்தின் சதியல்ல. மின்சார பொறியியலாளர்களின் அரசியல் சதிநடவடிக்கையாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று (17) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தடை குழப்பத்துக்கு அரசாங்கத்தின் சதிநடவடிக்கையென எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அரசாங்கம் இவ்வாறான செயலை மேற்கொண்டு மக்களை ஒருபோதும் அசௌகரியத்துக்கு…

Read More

இன்று மட்டுமே மின்வெட்டு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இன்று மாலை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவ்வாறு தொடங்குமாயின், இன்றைய தினம் (16) மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Read More

நீரை விநியோகிப்பதில் சிக்கல்

மின் தடை அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை  விநியோகிப்பதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உரியவாறு மின்சாரம் கிடைக்காமையே இதற்குக் காரணமாகும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார். எனினும், கொழும்பு, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

மின் தடை: பியகம மின்மாற்றி 30 வருடங்கள் பழமையானது

பியகம  மின் விநியோக நிலையத்தில் காணப்படும்  மின்மாற்றி வெடிப்புக்கு உள்ளானமையினாலேயே இந்த மின்தடை ஏற்பட்டதென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மின்சாரத் தடை தொடர்பில் மின்சக்தி மற்றும் சக்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை  கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொடவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கைச்சாத்துடன், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பியகம  மின் விநியோக நிலையத்தில் காணப்படும்  மின்மாற்றி சுமார் 30 வருடங்கள்…

Read More

இன்று மட்டுமே மின்வெட்டு?

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இன்று (16) மாலை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார். இவ்வாறு நுரைச்சோலை அனல் மின்நிலையம் மீண்டும் இன்று இயங்கத் தொடங்குமாயின், இன்றைய தினம் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மின்சாரத் தடை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் இப்பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய முன்கூட்டிய நடவடிக்கைகளை…

Read More

மின்சார சபை தலைவரின் இராஜினாமா கடித்ததை ஏற்க மறுப்பு

மின்சார சபையின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக வழங்கிய கடிதத்தை உரிய அமைச்சர் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத் தடையை பொறுப்பெற்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தனது பதவியை அநுர விஜயபால இராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனவே மின்சக்தி அமைச்சருக்கு குறித்த கடிதம் வழங்கிய போது அவர் அதனை மறுத்துள்ளார் தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, அந்த இராஜினாமா கடித்ததை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

மின்சாரத் தடையில் நாச வேலை!

நாச வேலை காரணமாக நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்பக்  கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும்  இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு…

Read More

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது  தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மின்சார நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு – ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார தடைக்கு நாசகார செயல்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தவேளையில் ஜனாதிபதி இந்த திடீர் உத்தரவை பிறப்பித்தள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மின்சார தடை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்தள்ளார். மின்சார தடை தொடர்பில் பல பக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 21 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட…

Read More

மின் தடைக்கு, மின்னலே காரணம்

பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…

Read More