மட்டு.மாவட்டத்தில் மூன்று தினங்கள் மின்வெட்டு
இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது. இன்று 19.11.2015ஆம் திகதி திருமலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அருணகிரி வீதி, பூம்புகார், லொயிட்ஸ் அவன்யூ, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்னஊறணி, பெரிய ஊறணி, இருதயபுரம், கொக்குவில், ஞானசூரியம் சதுக்கம், சவுக்கடி, தளவாய், புண்ணைகுடா ஆகிய இடங்களிலும் நாளை 20.11.2015ஆம் திகதி மண்டூர், கணேசபுரம்,…
