Headlines

மட்டக்களப்பில் ரயில் விபத்து

மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து இடம்பெற்றது. குறித்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே விபத்துக்குள்ளானது. குறித்த ரயில்  புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், ரயில் இஞ்சின் மோதியதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார். இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன்,  ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும்  சேதமடைந்துள்ளன. இதன்போது, பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும்…

Read More

மட்டக்களப்பு அபிவிருத்தி பணிகளின் முடக்கம் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் சடுதியாக முடக்கமடைந்துள்ளது. இதனால் துரித அபிவிருத்தியடைந்துவந்த மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவை அடைந்துள்ளது என பாராளுமன்றத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். காலநிலை சுற்றாடல் தொடர்பான விவாதத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். > அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், > எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்கள்…

Read More

பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும் -அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – புதிதாக சிந்தித்து பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும். நாம் இன்னும் நமது மூதாதையர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தான் பால் உற்பத்தியை மேற்கொள்கிறோம். அதனால் நமது உற்பத்தியில் முன்னேற்றம் இல்லை. அத்தோடு நமது தொழிலிலும் அபிவிருத்தி இல்லை மாறாக, புதிய வகையில் சிந்தனை செய்து பால் உற்பத்தியை பெருக்கும் வழிவகைகளை பாற்பண்ணையாளர்கள் கண்டறிய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார். வெள்ளாவெளி…

Read More

முஸ்லிம்கள் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாகும் – ரண்முத்தகல சங்கரத்ன தேரர்

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் (12.07.2016 செவ்வாய்கிழமை) அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல்(பிலால் ஹாஹி) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு பொருநாள் இரவு நேர ஒன்று கூடல் மற்றும் இராப்போசன நிகழ்வு மட்டக்களப்பு ரெஸ்ட்-இன் ஹோட்டலில் இடம் பெற்றது. மதத் தலைவர்களை மதிக்கின்ற தன்மை மனிதர்களிடையே உருவாக வேண்டும் என கல்முனை சுபாத்ரா ராம விகாராதி பதி ரண்முத்தகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.; மத்தலைவர்கள் மூலம்தான் அந்தந்த இனத்தவர் தங்கள் மத விடயங்களை…

Read More

மட்டக்களப்பில் 251 ஹெக்டேயரில் சோளம் பயிர்ச்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் 16 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இம்முறை சுமார் 251 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இராசரெத்தினம் கோகுலதாசன் தெரிவித்தார். மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை, வந்தாறுமூலை, கிரான், ஏறாவூர், ஆயித்தியமலை, மண்டபத்தடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், மண்டூர், வெல்லாவெளி, தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளன. மேலும், சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 50…

Read More

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்

தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில்  வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார்.

Read More

தற்போதய அரசில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி!

தற்போதய அரசாங்கத்தில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 83 பில்லியன் ரூபாக்களை கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கியிருக்கின்றமையானது பாடசாலை, கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் வரலாற்றிலே இதுவே முதல் தடவையாகும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன் இன்று வியாழக்கிழமை (30) காலை மட்டக்களப்பிலுள்ள அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு வருகை தந்து அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டதுடன் கலாசாலை முதல்வர் மற்றும் கல்வியியலாளர்கள் ஆசிரிய பயிலுனர்களுடனும்…

Read More

ஆட்டுக்கொட்டிலில் தீ பரவியதில் 47 ஆடுகள் இறந்துள்ளன

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை (ஜுன் 29, 2016) ஆட்டுக் கொட்டில் தீப்பற்றி எரிந்ததில் அந்தக் கொட்டிலில் அடைக்கப்பட்ட ஆடுகளில் சுமார் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து மடிந்துள்ளதாக அதன் உரிமையாளரான கந்தப்போடி விஸ்வநாதன் (வயது 38) தெரிவித்தார். மொத்தமாக தன்னிடமிருந்த 56 ஆடுகளில் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து போக மீதமாக 9 ஆடுகளே தீக்காயங்களுக்கு உட்பட்டு எஞ்சியிருப்பதாகவும் அவர் மேலும்…

Read More

மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும் – அமீர் அலி

– அபூ செய்னப் – மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும்.கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த வீழ்ச்சியானது இந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து தரப்பினரையும் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “ஈஸ்ட் கேட்” நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கல்லூரியில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை…

Read More

நாளை மட்டக்களப்பில் போராட்டம்!

ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Read More

மாவட்ட புற்றுநோய் சங்கத்திற்கு நன்கொடை

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் சங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தினால் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை (23) மாமாங்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் வை. தர்மரட்ணம் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நோயாளர்களின் நலன் கருதி கொழும்பு மற்றும் மஹரகம புற்று நோய்…

Read More

கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயமொன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர், NAQDA திறுவனத்தினுடைய தலைவர் அதன் பொது முகாமையாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் காத்தான்குடி கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். மாவட்ட செயலகத்திற்கு முக்கிய ஓர் அபிவிருத்தி திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் உட்பட்ட உயர் அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாகவே காத்தான்குடியில் மீனவர்களின்…

Read More