Headlines

மட்டு.மாவட்­டத்தில் மூன்று தினங்கள் மின்­வெட்டு

இலங்கை மின்­சார சபையின் திருத்­தப்­ப­ணிகள் கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணி­நேர மின்­வெட்டு அமுல்­ப­டுத்தப் பட­வுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட மின்­அத்­தி­யட்­சகர் பணி­மனை தெரிவித்­துள்­ளது. இன்று 19.11.2015ஆம் திகதி திரு­மலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அரு­ண­கிரி வீதி, பூம்­புகார், லொயிட்ஸ் அவன்யூ, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்­ன­ஊ­றணி, பெரி­ய­ ஊ­றணி, இரு­த­ய­புரம், கொக்­குவில், ஞானசூரியம் சதுக்கம், சவுக்­கடி, தளவாய், புண்­ணை­குடா ஆகிய இடங்­க­ளிலும் நாளை 20.11.2015ஆம் திகதி மண்டூர், கணே­ச­புரம்,…

Read More

மட்டுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டுயானை புகுந்து கைவரிசையினை மீண்டும் காட்டியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, நேற்று (16) அதிகாலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது அரிசி ஆலையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. யானைகளின் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் நாளாந்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனை அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் அச்சமின்றிய வாழ்க்கையினை தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

அமீரலியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அரசாங்க அதிபர்

– அபூ செய்னப் – கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்த முறையற்ற விதத்தில் ஆற்றுமண் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தேவையான மண்ணை பெற்றுக் கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அபிவிருத்தி குழுக்களும் பெரும்பாலும் அதிக தொகை பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது இதற்கான அடிப்படைக்காரணம் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் மணல் அகழும் முகவர்கள் அதிக…

Read More

போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார  திலங்க ஜெயலால் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாத்திரம் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை மது போதையில் வாகனம் செலுத்திய 92 பேரை நீதி மன்றத்தில்…

Read More

காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

– பி.எம்.எம்.ஏ.காதர் – கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான…

Read More