Headlines

சென்னையில் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான…

Read More

ஓய்ந்தது பேய் மழை: வழமைக்கு திரும்புகின்றது சென்னை

சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.  செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த 2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில்…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்

இந்தியா தமிழக தலைநகர் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் – மைத்ரி” என தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் இதுவரையில் 269 பேர் உயிரிழந்ததுடன் இலட்சக் கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது…

Read More

அன்று முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்றேன், இன்று கண்கள் கலங்குகிறேன்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இஸ்லாமியர்கள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு காப்பாற்றினர். பின்னர் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு வழங்கினர். அப்போது ஒரு முதியவர் இதே இஸ்லாமியர்களுக்கு அன்று நான் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்றேன், ஆனால் இன்று அதே இஸ்லாமியர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மீட்டு பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு கொடுக்கிறீர்கள் என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினார். இன்று என் குடும்பம் உயிர் பிழைக்க அல்லா தான் உங்களை…

Read More

புத்தகாயாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

புத்தகாயாவிற்கு யாத்திரை சென்று அங்கு சிக்கியுள்ள 108 இலங்கையர்களை நாளை சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அசல வீரகோன் தெரிவித்தார். மேலும் அவர்கள் எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

Read More

தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு

சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கூறியுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (அசோசெம்) அறிக்கையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்த சூழ்நிலை வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் பல வணிக நடவடிக்கைகளுக்கு அச்சத்தையும், ஸ்திரமற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது. சாதாரண குடிமகனும் சொத்துகள் சேதமடைவதன் மூலம் இழப்பை…

Read More

சென்னைக்கான எயார் லைன்ஸ் விமான சேவை ரத்து

சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்  விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு…

Read More

தொடரும் அடை மழையால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக 18 ஆயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக செய்கை சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமத்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது. கிரான், வெல்லாவெளி, கொக்கடிச்சோலை…

Read More

வெள்ள பாதிப்பு: அமைச்சர் றிஷாத் அதிகாரிகளுக்கு உத்தரவு

வவுனியா மாவட்டத்தில், வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் (16) கைத்தொழில், வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில், அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற, வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை தொடர்பான கலந்துரையாடலின்போதே…

Read More

மன்னாரில் வெள்ளம் : போக்குவரத்து பாதிப்பு

– வாஸ் கூஞ்ஞ – மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  மழை காரணமாகவும் வெளி மாவட்டங்களிலிருந்து உள்நோக்கி வரும் மழைநீர் காரணமாகவும் மன்னார் பகுதியில் பல வீதிகளிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாந்தை மேற்கு பகுதியிலுள்ள பாலியாறு பகுதியில் வீதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வீதிகளை மேவி பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் இப் பகுதியில் வெள்ளாங்குளம் பகுதியில்…

Read More