Headlines

விபத்தில் ஊடகவியலாளர் பலி

-மயூரன் – யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து யாழ்.கண்டி வீதியில் இருந்து சோமசுந்தரம் வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த ஊடகவியலாளர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை (02) இடம்பெற்ற வீதி விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த…

Read More

பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

செல்வநாயகம் கபிலன் தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ்….

Read More

உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி

– பதுர்தீன் சியானா – அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று புதன்கிழமை (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி, கஹடகஸ்திகிலிய – ஈத்தல்வெட்டுனுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.மஹீஸா (வயது 7) எனவும் குறித்த சிறுமியின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின்…

Read More

இந்திய பிரஜையின் சடலம் மீட்பு

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர் இந்தியமீனவராக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

Read More

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!

தமி­ழ­கத்தில் முச்­சக்­க­ர­வண்­டி ஒன்றில் பய­ணித்த பெண்ணின் தலை­முடி பறந்து லொறி­யொன்றில் சிக்­கி­யதில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் திருப்­ப­தியைச் சேர்ந்­தவர் கரு­ணா­கரன் (45). இவ­ரது மனைவி மோகனா (38). இவர்கள் தங்­க­ளது குடும்­பத்­தி­ன­ருடன் காஞ்­சி­புரம் வந்­துள்­ளனர். இவர்கள் அண்­மையில் காஞ்­சி­பு­ரத்­தி­லி­ருந்து பெங்­களூர் செல்­வ­தற்கு முச்­சக்­க­ர­வண்­டியில் அரக்­கோணம் ரயில் நிலையம் சென்­றுள்­ளனர். வழியில் மஞ்­சம்­பாடி ரயில்வே கேட் அருகே முச்­சக்­க­ர­வண்டி செல்­லும்­போது மோக­னாவின் தலை­முடி வெளியே பறந்து பக்­கத்தில் சென்ற லொறியின்…

Read More

சோமவன்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் காலமானார். ராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்  காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சீரற்ற காலநிலை – இதுவரை 92 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 92 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது பல பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

வத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு

வத்தளைப் பிரதேசத்திலிருந்து இரண்டு சடலங்களை இன்று (18) மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விரு சடலங்ளும் 16 மற்றும் 09 வயதுடைய சிறுவர்களுடையது என்றும், வெள்ளத்தினால் சிக்குண்டே இவ்விருவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Read More

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More

பிலிப்பைன்ஸில் இலங்கையர் மரணம் : தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்

பிலிப்­பைன்ஸில் உள்ள இலங்­கைக்­கான தூத­ர­கத்­தினால் வெளிநாட்­டு­ அ­மைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு, நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­பவர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­க­ அ­றி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் டுபாய் நாட்டில் பொறி­யி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்­ள­தோடு கடந்த 10 வரு­டங்­க­ளாக பிலிப்­பைன்ஸில் வாழ்ந்து வந்­துள்ளார். அவரின் பிறந்த திகதி 1958.12.09 ஆகவும் பிறந்த இடம் வெள்ளவத்தை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு சஞ்ஜீவ் சேவியர் எனும் பெய­ரு­டைய மக­னொ­ருவர் இருந்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­ப­வரின் உற­வி­னர்கள் எவ­ரேனும் இருப்பின் அல்­லது உற­வி­னர்கள் தொடர்­பான ஏதேனும் தக­வல்கள்…

Read More

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…

Read More

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 04ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று (6) மரணமடைந்துள்ளார். கட்டட நிர்மாணப் பணியின் போது மரங்கள் சரிந்தது வீழுந்தமையால் தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.

Read More