Headlines

சோபித தேரர் காலமானார்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – சிறந்த சமயத் தலைவர் சோபித தேரரர் காலமானார். இலங்கை மக்களுக்கு பாரிய இழப்பு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்றவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட மாதுருவாவே சோபித தேரர் இன்று (08) காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலையில் சிங்கப்பூர் வைத்திய சாலையில் இறையடி சேர்ந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல காலமாக  இலங்கையில் சர்வாதிகார ஆட்சி முழ நாட்டு மக்களையும் அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்த நிலையில்…

Read More

அக்கரைப்பற்று, ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் சடலமாக மீட்பு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார். அக்கரைப்பற்று -11 ஆம் பரிவு (முறாவோடை) அல்-பாத்திமியா வித்தியாலய வடக்கு வீதியில் வெட்டப்பட்டிருந்த குழியில் இருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று 14 ,காதிரியா கடற்கரை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

Read More

சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (05) மாலை காலஞ்சென்ற சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு கொழும்பு சுலைமான் டெரஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Read More

சோமா எதிரிசிங்க காலமானார்

இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகி மற்றும்முன்னணி பெண் வர்த்தகர் சோமா எதிரிசிங்க காலமனார். 939ம் ஆண்டு மீகொட பகுதியில் பிறந்த இவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி

அதியுயர்  வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் காலி ஜின் தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.

Read More

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம்  – உடுவில் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திடமாக வீடொன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவத்தில் 65 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More