Headlines

ஜேர்மன் நாட்டுப் பெண் பலி!

ஹிக்கடுவை சுற்றுலா விடுதி கடற்பிரசேத்தில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் (61) ஒருவர் இன்று (22) பகல் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த பெண் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் என ஹிக்கடுவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி!

பாதுக்க – முருதகஹஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,மரண பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

யானை தாக்கி இருவர் பலி

அனுராதபுரம்  தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவத்தில் 55 வயது மற்றும் 52 வயதானவர்களே  உயிரிழந்துள்ளனர்.

Read More

தெஹிவளை சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் வெளியாகியது

தெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று (16) காலை 10 மணிக்கு தெஹி­வளை பொலி­ஸா­ருக்குச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றை அடுத்தே குறித்த வர்த்­தகர், அவ­ரது மனைவி, அவர்­க­ளது மகள் மற்றும் அவர்­களின் உறவுக்காரர் ஒரு­வரின் மகள் ஆகியோரே இவ்­வாறு உயிரிழந்த நிலையில்…

Read More

கப்பம் கோரியே வானுடன் எரிப்பு!

தங்கொட்டுவ பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஐந்து பேருடன் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் தொடர்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ – புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியில் எரிந்த நிலையில் இருந்த வான் தொடர்பாக 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வானிற்குள் இருந்து 5 சடலங்களையும் மீட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு பணம் கப்பம் பெறுதலும் ஒரு…

Read More

கெகிராவை வாகன விபத்தில் 9 வயது சிறுவன் பலி

கெகிராவ பல்லேவெதியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகன விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறியரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் குறித்த வாகனங்களின் சாரதிகள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிப்பு

சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்

கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார்…

Read More

விபத்தில் இளைஞர் பலி : இருவர் படுகாயம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மண்முனை சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 27 வயது ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொக்கடிச்சோலை பக்கமிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனை பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27…

Read More

ஆறு வயது சிறுவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து பலி

பதுரலிய பிரதேசத்தில் ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் உறவினர்கள் சிலருடன் சுற்றுலாவிற்காக வருகை தந்து அங்கு தங்கியிருந்த   விடுமுறை விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்தே சிறுவன் உயிரிழந்துள்ளான். பாயகல பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பிரித்தானிய பாதுகாப்பு உத்தியோகத்தர் தென் பகுதியில் உயிரிழப்பு

காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலில் சேவையாற்றிய பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – உனவட்டுன சுற்றுலா விடுதியொன்றிலிருந்து நேற்றைய தினம் (09) அவரது சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள குறித்த கப்பல் மீண்டும் பயணத்தை  ஆரம்பிக்கும் வரை இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் உனவட்டு சுற்றுலா விடுதியில்  தங்கியுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மர்மமான முறையில்  உயிரிழந்துள்ளதாக…

Read More

குடிசையிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

இரத்தினபுரி பகுதியிலுள்ள குடிசையொன்றில் இருந்து 15 வயதுடைய சிறுவனொருவரின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read More