Headlines

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 14 போ் கைது

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த 14 போ் இன்று (19) அதிகாலை கைதுசெய்யபட்டுள்ளதாக பொகந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனா். மாணிக்கக்கல் அகழ்விற்க்காக குறித்த பகுதி ஒரு வருடத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா். இதேவேளை, நேற்றயதினம் பொகந்தலாவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது. பொகவந்தலாவை பொலிஸாரால் 9பேரும் விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பேரும் கைது செய்யபட்டுள்ளதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன் படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனா்.

Read More

23 வயது இளைஞரை கடத்திய 25 வயதான யுவதி கைது!

23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்தியகுற்றச்சாட்டின் பேரில் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார். இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார்விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்

Read More

மோடியை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்த வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார். இந்த காட்சி இது கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர்….

Read More

மாணவனை தாக்கிய பஸ் நடத்துனர் கைது

பஸ் நடத்துனரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பஸ் நடத்துரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை கினிகம பகுதி பாடசாலையொன்றில் ஆண்டு 11 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் ஒருவனே தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் பண்டாரவளை பிராந்திய இ.போ.ச.டிப்போ பஸ் நடத்துனர் ஒருவரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பஸ்சில் பாடசாலைக்குச் செல்வதற்காக ஏறிய இம்மாணவன் பஸ்சில் செல்வதற்கான (பாஸ்)…

Read More

பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலி கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஏனைய நாட்டைச் சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய நாட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட் திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் ஜெனிவாவிற்கு செல்ல இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

30 வருடங்களின் பின் மாட்டிக்கொண்ட மரண தண்டனை கைதி

மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஒருவரை கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இந்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பின்னர், இந்த நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்ததுடன், மீண்டும் நாடு திரும்பி புறக்கோட்டை…

Read More

களனி பல்­க­லை மாணவர்கள் ஐவர் கைது

நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­விக்கு பகிடிவதை செய்த அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரி­பத்­கொடை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். கிரி­பத்கொடை பொலிஸ் நிலை­யத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வான விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த ஐவ­ரையும் கைது செய்­த­தாக களனி பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னகோன் தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, தற்­போது…

Read More

முன்னாள் போராளி பிரபாவும் கைது

புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக  அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Read More

ஹெரோய்னுடன் பாக். பிரஜை கைது

பாகிஸ்தான் பிரஜையொருவர் ஹெரோய்னை விழுங்கிக் கடத்துவதாகக் கிடைத்த தகவலையடுத்து, டுபாயிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பாகிஸ்தான் பிரஜையொருவரை போதைப்பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

Read More

இலங்கை மீனவர்கள் 1205 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 1205 பேர் இந்திய கடற்படையினரினால் கடந்த ஐந்து வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் காரணமாக, அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், 241 படகுகள்  கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்திய மீனவர்கள் 2391 பேர் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர கடற்படை தலைமை அதிகாரி சத்ய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார். நாளைய தினம் குறித்த கடற்படை அதிகாரி சத்ய…

Read More

பொலிஸ் பாிசோதகரொருவர் கைது!

மாரவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகரொருவர் கொழும்பு விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்பதாக சீதுவ பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளார். அக் காலப்பகுதியினுள் வீடுடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை தடுத்து வைத்து வன்மையாக தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றில் பெயரிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேஸ்புக்கில் ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்திய சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீசா இல்லாமல்  மலேசியாவிற்குச் சென்று அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று இலங்கை வந்த போது  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More