Headlines

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான  வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm

Read More

கே.கே. பியசேன கைது!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேன இன்று  (29)காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அரச வாகனம் பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்!

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

வயலின் வாசித்த வௌிநாட்டு பிரஜை கைது

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்துகொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வயலின் இசைத்துகொண்டே அவர் பிச்சை எடுத்ததாக அறியமுடிகின்றது.

Read More

முன்னாள் சதோச தலைவர் கைது

முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

தலைமன்னார் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Read More

லஹிரு வீரசேகரவிற்கு விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு ஓ.ஜ.சி கைது

– அஷ்ரப் ஏ சமத் – கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்ணிடம் லஞ்சம் பெற்றதற்காக இன்று  (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா். பொறுப்பதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிராக பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக 1 இலட்சம் ருபா பேரம் பேசி உள்ளாா். அதில் முற்பணத்தினை தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்ணிடம் 20ஆயிரம் பெறும்போதே விசேட பொலிஸ் கைது செய்தனா். இவர் கொழும்பு மஜிஸ்திரேட்…

Read More

ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே…

Read More

ரொஜர்விற்கு பிடியாணை

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடியவால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸைத் அல்ஹுசைன் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் காரணமாக, பொலிஸாரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரொஜர் செனவிரட்ன சமுகமளிக்காத காரணத்தாலேயே அவருக்கு குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

Read More

கல்கிசை காதி நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு பிடியாணை

-அஸ்ரப் ஏ சமத் – கல்கிசை மஜிஸ்ரேட் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் காதி நீதிமன்றத்தில் காதீநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்கிசை நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு காதீநிதாவான் தேசமான்ய எம்.வை பாவா (ஜே.பி) தெரிவித்தாா். இவ் வழக்கு சம்பந்தமாக காதீநீதாவான் தகவல் தருகையில் – திருமணம் முடித்து 2 மாதம் மனைவியையும் இருந்து விட்டு அவள் கர்ப்பவதியாகி தற்பொழுது 5 மாத குழந்தை ஒரு வருடமாக நடு வீதியில் விட்டு விட்டு, அக்குழந்தைக்கம் தாய்க்கும்…

Read More

சுஜித் மற்றும் புபுதுஜாகொட கைது

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More