Headlines

அமைச்சரின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் கைது

விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகாரையின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் பெயரை கூறி ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் 4 முதல் 5 இலட்சம் வரையிலான பணத்தை மோசடி செய்துள்ளார். இது போன்று பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவை கைது செய்ய ஸ்பைன் நீதிமன்றம் உத்தரவு …!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்யுமாறு, ஸ்பானிஷ் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது! இந்தத் தகவலை எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் தெரிவிக்கவில்லை!  2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காஸா நோக்கி சென்று கொண்டிருந்த Freedom Flotilla என்ற கப்பலை வழிமறித்த, இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதல் நடாத்தினார்கள். அது தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Jose de la Mata, பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட ஆறு இஸ்ரேலிய அரச…

Read More

கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை!

நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இமேஷா வசந்த என்பருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். மேலும், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

களவாடிய 30ஆயிரம் டின் மீன்கள் மீட்பு

ரத்தொலுகம வீடமைப்பு திட்டத்தின் அங்காடியொனறில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 47 இலட்சம் பெறுமதியான 30ஆயிரம் டின் மீன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த டின் மீன்கள் நீர்க்கொழும்பு – கிபுலாபிடிய பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இருந்து திருடப்பட்டவை என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ரத்தொலுகம பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

இஸ்லாத்தை அவமதித்த ஞானசாரக்கு எதிராக வழக்கு

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் புனித பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014, ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும் 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த அவதூறான அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தென்னாபிரிக்க நாட்டவர் கைது

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. காலாவதியான கடவு சீட்டுடன் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது

கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தனது பிள்ளையை ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளையை பராமரிக்க முடியாமையினாலேயே இவ்வாறு ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயச்சித்தாக கைது செய்யப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 36 வயதுடைய தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குமார் குணரத்தனம் கைது

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.

Read More