Headlines

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் 3 கோடி ரூபா பெறுமதியானஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஹெரோயின் 2.24 கிலோ கிராம்  நிறையுடையது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஹெரோயினை கடற்படையினர்கைப்பற்றியுள்ளனர். புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது  குறித்த 6 பேரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும்அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த  ஹெரோயின் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வவுனியா விசேடபோதைபொருள் ஒழிப்பு பிரிவு…

Read More

770 கிலோகிராம் கடலட்டை மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 770 கிலோகிராம் கடலட்டைகளை, கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 500,000 ரூபாய் பெறுமதியான இந்தக் கடலட்டைகள் புத்தளத்திலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கடலட்டைகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தத் தொகை கடலட்டையை கடத்தி லந்த கல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

சுலைமான் கொலை – மேலும் ஐவர் கைது

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று மேலும் ஐவர் கைது…

Read More

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச  நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய பெண்கள் இருவர் கைது

சட்டவிரோமான முறையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட இந்திய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில், விமானத்தின் உள்ளே இருந்த நிலையில் இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 28 மற்றும் 47 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வயிற்றில் வைத்து இந்த தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டுச் சென்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

நாடு கடத்தப்பட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜர்!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 6பேர் இலங்கைக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். அதற்கமைய இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த வேளைகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள் கடந்த மாதம் 21ம் திகதிகாத்தான்குடி கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில்தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசின் கோரிக்கமைய இவர்கள்அவுஸ்திரேலிய படகுகள் மூலம் காப்பற்றப்பட்டு மீண்டும்…

Read More

போலி வீசா மற்றும் கடவுச்சீட்டு தயாரிக்கும் கும்பல் சிக்கியது

போலி வீசாவைப் பயன்படுத்தி ஆட்களை கனடாவுக்கு அனுப்ப தயாராக இருந்த சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கர விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200க்கும் அதிகமான போலி கடவுச்சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அந்த கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு நபரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை ஆகிய பகுதில்…

Read More

சட்டவிரோத மிருகக்காட்சிசாலை

சுற்றுலாத்துறையினரின் பார்வைக்காக சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளைத் தடுத்துவைத்திருந்த ஒருவரை தம்புள்ள பிரதேசத்தில்வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்படி சட்ட விரோத மிருகக்காட்சி சாலை தம்புள்ள  பிரதேசத்திலுள்ளகபுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்று வந்துள்ளது. சீகிரிய வன விலங்குகள்திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி  நேற்று இம்முற்றுகை இடம் பெற்றுள்ளது. ஒரு ஹோட்டலின் பின் பகுதியில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டகூடுகளில் இவை அடைக்கப்பட்டிருந்த வேளை அதிகாரிகள்கைப்பற்றியுள்ளனர். மேற்படி விலங்குகள் காயமடைந்திருந்ததன் காரணமாக வைத்தியசிகிச்சைக்காக அவற்றை தாம்…

Read More

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

19 மீனவர்கள் கைது

கொக்குத்துடுவை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த 19 மீனவர்கள் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 4 கண்ணாடிநார் படகுகள் மற்றும் 3 தங்கூசி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Read More

11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார். குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.

Read More