Headlines

உகண்டாவில் சகல சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது

உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில்…

Read More

வவுனியா முகத்தான்குளத்தில் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் சிவாஜினியின் (அ.இ.ம.கா) வேண்டுகோளின் படி, இந்தக் கிராமத்தின் முக்கிய தேவையாக ஊர் மக்களால் தங்களது ஆலயத்தினை புனரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் ரூபாய் 10 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு முகத்தான்குளம் இந்து ஆலயத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றபோது, பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச்…

Read More

நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Read More

ஞானசாரருக்கு விளக்கமறியல்

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ்…

Read More

இரகசிய மாளி­கை­யல்ல; நிலக்கீழ் வதி­விடம் கோத்தா விளக்கம்

ஜனா­தி­பதி மாளி­கையில் நிலத்­துக்கு அடியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சொகுசு மாளி­கை­யா­னது, இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்ட மாளி­கை­யல்ல. மாறாக ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்பு கருதி பாது­காப்பு சபை, இராணுவ தள­பதி உள்­ளிட்­டோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அமைக்­கப்­பட்ட வதி­விடம் மட்­டுமே என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 2009 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரேயே இந்த நிலக்கீழ் பாது­காப்பு வதி­விடம் அமைக்­கப்­பட்­ட­து.அப்­போ­தி­ருந்த சூழலில் ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்புக் கரு­தியே அது நிர்மாணிக்கப்பட்டது. எவ­ரி­னதும் தனிப்­பட்ட தேவைக்­காக அது அமைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும்…

Read More

ஜோக்கர்களை அனுப்பவேண்டாம்: மஹிந்தவே சபையில் பதிலளிக்க வேண்டும்

-ஜே.ஜீ.ஸ்டீபன்-/ -ப.பன்னீர்செல்வம்- உடலாகம, அறிக்கை முதல் அமெரிக்காவின் தீர்மானம் வரையிலான அனைத்துக் கொடுக்கல் வாங்கல்கள் ஆவணப்பரிமாற்றங்கள்,  உடன்படிக்கைகள்  ஆகிய அனைத்து செயற்பாட்டு ரீதியான விடயங்களுடனும்  முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த  ராஜபக் ஷவே நேரடித் தொடர்புடையவர். எனவே சமகாலத்தில் எழுந்துள்ள இப்பிரச்சினைக்கு அவரே  பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி பதிலளிக்க வேண்டுமே தவிர ஜோக்கர்களை ஏவிவிட்டு பதிலளிக்க  முற்படக்கூடாது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ   இன்று  சபையில்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற  ஐ.நா.அறிக்கை…

Read More

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read More

மாந்தை மேற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.  இதுவரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள், நடந்து கொண்டிருக்கும் அபிவிருத்திகள் மற்றும் மேலதிக அபிவிருத்திகளுக்கு தேவைப்படும் நிதிகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது

Read More

மைத்திரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்! பொலிஸ் மா அதிபரிடம் கோரும் அமைச்சர்

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. அரசாங்கம் எந்த தேர்தல் வன்முறை செயல்களையும் அனுமதிக்காது எனவும் டளஸ் அழகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் மும்பையில் கைது

-மும்பை – ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் அர்ஷித் குரேஷியை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் உள்ள இளைஞர்களை மூளைச்சலைவை செய்து அவர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஆர்ஷித் குரேஷி மீது சந்தேகம் தெரிவித்து  பயங்கரவாத தடுப்பு படை மற்றும் கேரள போலீசார் இணைந்து இரவு மும்பையில்  சோதனை நடத்தி  ஆர்ஷித் குரோஷி கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தீட்டுதல், இரு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவின் போலிசார் ஆர்ஷித் குரோஷி…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (22 ) இடம்பெற்றது. அதிகளவான  வளங்களைக் கொண்டுள்ள முசலி மக்கள், பொதுவாக விவசாயம் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றினை மாத்திரமே அவர்களது அடிப்படை தொழிலாகச் செய்து வருகின்றனர். அந்தப் பிரதேசத்தில் உள்ள…

Read More

தாய் வெளிநாட்டில்: 6 மாத குழந்தை மர்ம மரணம்: தந்தை-சித்தி கைது!

6 மாத குழந்தை ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமானமை தொடர்பில் குழந்தையின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். ஹிருணி மதுமாலி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குழந்தையின் தாய் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் குழந்தை தாயின் தங்கையிடம் வளர்ந்து வந்துள்ளது. குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பின் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குழந்தையின் தொண்டையில் காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் சந்தேகநபர்கள் கைது…

Read More