Headlines

மின்சாரம் தாக்கி பச்சிளம் குழந்தை பலி

வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (13) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற 1 வயதும் 10 மாதமும் ஆன குழந்தையே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குழந்தையும், அவரது பெற்றோரும் கடந்த வாரம் அளவில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர்கள் வென்னப்புவ பிரதேசத்தின் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று…

Read More

‘ஒன்றுபட்டு வாக்களித்து ஊரின் தலைமையை உறுதிப்படுத்துங்கள்’ – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை ஆதரித்து, பொத்துவிலில், இன்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சமூக நலனுக்காகவும்…

Read More

பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம் – அமைச்சர் றிஷாத்

பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, நேரியகுளம், மாங்குளம், அல்/ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “அருகிலுள்ள நல்ல பாடசாலை”  திட்டத்தின் கீழ் அமைச்சரின் முயற்சியினால் உள்வாங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் இன்று (24/10/2016) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற…

Read More

பல்கலை மாணவர்கள் கொழும்பில் போராட்டம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியை விற்கின்றமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து நேற்று கொழும்பில் பல் கலைக்கழக மாணவர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தாமரைத்தடாக சுற்றுவட்டத்துக்கு அருகாமையிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தை மாணவர்கள் முன்னெ டுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக பல கோ­ங்களை எழுப்பியிருந்தனர். அரசால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை விற்பனை செய்வதற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாள்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், மஹாபொல…

Read More

மைத்திரி –மஹிந்தவை இணைக்க முயற்சி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அடிப்­படை செயற்­பா­டு­களை அமைச்சர் எஸ்.பி.திசா­நா­யக்க முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெ­ற­வேண்டும் என்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­வே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இணைந்து பணி­யாற்­ற­வேண்டும் என கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ளர்கள் தெரி­வித்­து­வ­ரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்­கவின் தலை­மையில் விரைவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும்…

Read More

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

கடந்த வருடம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று16.07.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய ,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களின் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில்  பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் , ஜெளபர், நெளபர், ஜெஸ்மின், பாயிஸா மற்றும் வட்டாரக் குழு தலைவர்களும்…

Read More

மன்னார் புதிய ஆயருக்கு அமைச்சர் ரிஷாட் வாழ்த்து தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, மரியாதைக்குரிய பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்கள் கடமையேற்கும் நிகழ்வு, மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இன்று (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன, புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

கல்வித்துறையில் இலங்கை முன்னிலை – யுனெஸ்கோ

தென் ஆசிய வலய நாடுகளுள் கல்வித்துறையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பொக்கோவா தெரிவித்துள்ளார். சிறந்த கல்விக்காக ஆசிரியர் பயிற்சிகளை வழங்க கல்வி அமைச்சு பல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பாக அவர் கல்வி அமைச்சை பாராட்டியுள்ளார். இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயில் அமைந்துள்ள தென் ஆசியாவின் ஆசிரிய பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். தென் ஆசிய வலய நாடுகளுக்கிடையே இலங்கை கல்வித்துறையில் மேலோங்கி இருப்பதாகவும், பாடசாலைக்கு…

Read More

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!!!

குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது. இதன் போது,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்ததை திறந்து வைத்தார். இதன் போது, பாடசாலையின் அதிபர் எல் எஸ் யமீனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச்…

Read More

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு மாற்றமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு அழைப்பாணை..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்…

Read More

கியூபாவில் முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்

கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். இதையடுத்து மோசடி, கையாடல், வங்கியில் பொய் கையெழுத்து, வணிக போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்றப்பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு…

Read More

தொழிலதிபர் ஹனீப் தலைமையிலான சுயேச்சைக்குழு அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்தது!

-ஊடகப்பிரிவு-   உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு, சுயேச்சையாக போட்டியிடவிருந்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப் தலைமயிலான சுயேச்சை குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டது. கடந்த வாரம் கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேச சபையில் சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையிலேயே இந்தக் குழு, எதிர்வரும் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. குறித்த சுயேச்சை குழுவின் தலைவரான தொழிலதிபர் ஹனீப், மடவளை பசாரின்…

Read More