Headlines

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் ரிசாத்




 

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அழைப்பிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாடசாலைக்கு கடந்த 08.07.2018 அன்று விஜயம் செய்தார்.

இதன்போது பாடசாலையின் முகப்பு, நுழைவாயில் மற்றும் மூன்றுமாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பது தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஜாபீர் மற்றும் பழைய மாணவர்களோடு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரிடம் கையளிக்குமாறு அமைச்சர் அதிபரை வேண்டிக் கொண்டார்.

குறித்த விஜயத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.ரீ ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ். எம். இஸ்மாயில், அப்துல்லாஹ் மஃரூப், நிந்தவூ பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் உபதவிசாளர் வை.எல் சுலைமானலெப்பை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.