Headlines

அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்களான…

Read More

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி!

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரொருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Read More

ஐதேக பதவிகளில் மாற்றம்

பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இன்று கூடியுள்ள அக் கட்சியின் செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக ஹரீன் பிரணாந்து நியமிக்கப்பட்டுள்ளதோடு, லக்வனிதா முன்னணியின் தலைவராக பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக தேசிய…

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

அலாஸ்காவில் நடுவானில் மோதிக் கொண்ட இரு விமானங்கள்!:இரு பைலட்டுக்களும் உயிர் தப்பினர்

வட அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நேற்று சனிக்கிழமை இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டுள்ளன. அலாஸ்காவின் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட அங்கோராகே (Anchorage) என்ற நகருக்கு வடக்கே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தின் போது பாரஷூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய இரு பைலட்டுக்களில் ஒருவருக்கு மோசமான காயங்களும் மற்றையவருக்கு சாதாரண காயங்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகவல் அலாஸ்காவின் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இரு பைலட்டுக்களும் பிராந்திய…

Read More

அணித் தலைவர் பதவிக்கும் ஆப்பு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…

Read More

மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்…..

மன்னார் மாவட்ட தலைமை பொலிஸ் பெருப்பதிகாரி ரத்நாயக்க தலைமையில் மன்னார் பிரதேசபையுடன் இணைந்து மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது…. இந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்ட நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர்.மன்னார் மாவட்ட பொலிஸ் தலைமைப்பொறுப்பாளர் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகள் பிரதேசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்……

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத் திறப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத்திறப்புவிழாவில் இன்று (11-02-2017)அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் பிரதித் தலைவர் ஜமீல், Dr.ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

விண்ணில் பாயத் தயாராகும் சீனாவின் லாங் மார்ச் 6

ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது சீனா. நிலவுக்குச் சென்று அங்கிருந்து திரும்புவம் விண்கலத்தை வடிவமைத்து வரும் சீனா, வரும் 2020-ம் ஆண்டுக்குள் தனது சொந்த ஆய்வகத்தை விண்வெளியில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக கூடுதல் எடை சுமந்து செல்லும் நவீன ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது. லாங் மார்ச் என்ற பெயரில் தொடர் ஏவுகலங்களை உருவாக்கி வரும் சீனா, இந்த ஆண்டு இறுதியில் லாங் மார்ச் 6 ஏவுகலத்தை விண்வெளியில் ஏவத் தயாராக உள்ளது….

Read More

முஸ்லிம் நாடுகளுடன் ரணில் ஒப்பந்தம்

சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராம மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம்!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக குடிநீர் விநியோக திட்டத்தினை (2019.02.11) ஆரம்பித்துவைத்தார்… இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

Read More

கரையோரப் பிரேதசங்களில் கடும் சூறாவளி

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக இப்பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. நேற்று மாலை  வீசிய மினி சூறாவளி சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தது. பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்கிளிலுள்ள வீடுகளின் கூரைகள் மின் கம்பங்கள் என்பன சேதமானதுடன் மின்கம்பிகள் சில அறுந்து வீழ்ந்து சில மணிநேரம் இப்பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது. அட்டாளைச்சேனை…

Read More