Headlines

சுய­ந­லத்தை நோக்­காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­தனர்

தமது சுய­ந­லனை கருத்திற் கொண்டே சுதந்­திர கட்­சியில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வான சிலர் ஜனா­தி­ப­தியின் பேச்­சுக்கு இணங்கி 19 ஆவது திருத்­தத்தினை நிறை­வேற்ற ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர் என நவ சம சமாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்கிர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார். கொழும்பில் நேற்று அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கியப்படுத்­துவோம் என்ற அமைப் பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், இதுவரை 19 ஆவது திருத்தம் அமு­லுக்கு வர­வேண்டும் என்ற கொள்­கை­யுடன்…

Read More

அவசரமாக உதவி செய்வோம்..!

அவசரமாக உதவி செய்வோம்..! பணம் மூலம் உதவி செய்ய முடிய விட்டாலும் செய்வதன் மூலம் உதவி செய்யும் கரங்களுக்கு செய்தியை எடுத்துச் செல்வோம். Please help Dear Friend I need your SUPPORT now please ,My son ZAIN who is now 6 years old has to do a urgent RADIATION TREATMENT for a brain tumor, the doctors predicted this last week And my…

Read More

கொழும்பு மாநகரில் நாளை 17 மேதினக் கூட்டங்கள்

கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார். 2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காகவும், 2250 பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேதினத்தன்று அத்தியாவசிய…

Read More

மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை

மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்க சம்மேளன மே தின கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்க முடி­யாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஏழு மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் பிர­தி­நி­தி­களும் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச்…

Read More

தொழிற்சாலையை விட்டு தப்பி சென்ற அதிகாரிகள் : 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

(K.Kapila) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மகளின் பெயரை மாற்ற தந்தைக்கு உத்தரவு

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை சூட்டி மகிழ்வர். ஆனால் சீனாவில் ஒரு குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றுமாறு, அதன் தந்தைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பெயர் வைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும். அங்கு வசித்து வரும் லியூ என்பவர் தனக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பெய்…

Read More

கிரேக்க நாட்டில் கலகக்காரர்களிடம் இருந்து மந்திரியை காத்த மனைவி

கிரேக்க நாட்டில் யானிஸ் வாரவ் பக்கிஸ், நிதி மந்திரி பதவி வகித்து வருகிறார். அவர் தனது மனைவி டேனி மற்றும் நண்பர்களுடன் அங்கு எக்சார்சியா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அவர்கள் அனைவரும் இரவு விருந்தினை சாப்பிட்டு முடித்தனர். அப்போது அங்கு அதிரடியாக புகுந்த இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் கண்ணாடி பொருட்களை வீசி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிதி மந்திரி யானிஸ், காயம் அடைந்து விடாதபடிக்கு மனைவி டேனி,…

Read More

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள்! சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் மன்னர் சல்மான் அதிரடி!

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சவூதியின் முன்னாள் மன்னர் அப்துல்லாஹ்வின் மரணத்திற்குப் பின் சவுதி அரேபியாவின் புதிய மன்னராக சல்மான் பின் அப்துல் அஜீஸ் (வயது 79), கடந்த ஜனவரி மாதம் முடிசூட்டப்பட்டார்.இவர் பதவியுடன் பட்டத்து இளவரசராக முக்ரின் பின் அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முக்ரின் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பட்டத்து இளவரசராக வலிமை வாய்ந்த உள்துறை அமைச்சராக திகழ்ந்து வந்த முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டுள்ளார்….

Read More

போட்டோ – வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்களே.., உஷார் !

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த ‘ஸெல்பி’ யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ‘மேடம் இந்த சுடிதார்லே நீங்க சிம்ரன் மாதிரி இருக்கீங்க, ஒரே ஒரு போட்டோ…

Read More

நேபாள நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 22 மணி நேரத்துக்கு பின்னர் அழுகுரல் கேட்டு காப்பாற்றப்பட்ட 4 மாத குழந்தை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிப்போன ஒரு வீட்டின் அடியில் சுமார் 4 மாத குழந்தை சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட நேபாள ராணுவத்தினர் அந்த குழந்தை பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து அருகாமையில் உயிருக்குப் போராடியபடி, வலியாலும் வேதனையாலும் முனகிக் கொண்டிருந்த மற்றவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ராணுவ வீரரின் காதுகளில் மட்டும் சிறு குழந்தையின் மெல்லிய அழுகுரல் சத்தம் லேசாக விழுந்தது. சத்தம் வந்த இடத்துக்கு விரைந்து சென்றபோது, சற்று நேரத்துக்கு முன்னர்…

Read More

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பஸ் மோதியதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காரின் டிரைவர் காயமடைந்தார். பஸ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த நிறுவனம் அந்த கார் டிரைவருக்கு 90 ஆயிரம் திர்ஹம்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என…

Read More