Headlines

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!

கோழி இறைச்சிக்காக புதிய நிர்ணய விலையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய 380 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 410 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை ,அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு கோழி இறைச்சியினைப் பெறமுடியாது என மலையத்தில் ஹட்டன்,மஸ்கெலிய,பொகவந்தலாவ பிரதேச கோழிக்கடை வர்த்தகர்கள் நேற்றைய தினம் (18) கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு திரும்பினார் மஹிந்த!

தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச தாய்லாந்திற்கு விஜயம் செய்திருந்தார். தாய்லாந்தில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் மஹிந்த சந்;தித்திருந்தார். மே தினக் கூட்டத்திற்கான ஆயத்தங்கள் தீவிர முனைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த நாடு திரும்பியுள்ளார். நேற்று நள்ளிரவு (26) அளவில் மஹிந்த நாடு திரும்பியதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன….

Read More

விளையாட்டுத் துப்பாக்கி மேயர் கைது

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் கைதில் இருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடுவந்து பின் அது விளையாட்டுத் துப்பாக்கி எனக் கூறியவர் இந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார்

தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார் இலங்கை அரச தலைவர்கள் அழைத்தால் அங்கு அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தான் தற்போது தயாராக இருப்பதாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது இலங்கை அதன் சொந்த ன கடின உழைப்பு மூலம் தன்னு டைய சிக்கல்களை தீர்ப்பதற்குப் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குச் சிறந்த மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோர்வே நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி…

Read More

மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளாவிய ரீதியாக பொலிஸாரால் முன்னெடுக்கபட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமாக கைதுச்செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸாரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி மற்றும் சிறந்தபெறுபேருகளைப்பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.  

Read More

பொது மன்னிப்புக் காலம்: 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது….

Read More

ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம்!!!

கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனு கலந்து கொண்டார். நிறுவனத்தின் ஸ்தாபகத்தலைவர் பிரௌஸ் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கொழும்பு…

Read More

மலேசியாவிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

வீசா காலம் முடிவடைந்த பின்னர் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை மலேசியா கால அவகாசம் வழங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு வேலைசெய்யும் நோக்கில் சென்று வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப் பவர்கள் இந்தக் காலப்பகுதி யில் எதுவித தண்டனையு மின்றி நாடு திரும்ப முடியும் என பணியகம் தெரிவித் துள்ளது. கடவுச்சீட்டைத் தொலைத்த நிலையில் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் கூட தற்காலிக பயண…

Read More

மியன்மார் தேர்தல்: தோற்றதும் பேய் வென்றதும் பேய்?

13 மில்லியன் முஸ்லிம்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் மியன்மாரில் இடம்பெற்ற தேர்தலில் ஆங்சாங் சூயி தலைமையிலான எதிர்க் கட்சி வெற்றியீட்டி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறும் என ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளைக் கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அமைதிக்காக நோபல் விருது வென்ற ஆங்சாங் சூயின் முஸ்லிம் சிறுபான்மை மீதான அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்காததுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் இதுவரை வாய்திறந்தது இல்லை. இவருக்கு நோபல் விருது…

Read More

இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க முனையக்கூடாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்­ளேயே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­ தி­லக தெரி­வித்தார். இதன்­ பி­ர­காரம் இன­வா­தத்தைத் தூண்டி நாட்டை அரா­ஜகப்போக்­கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீர­வன்ச­விற்கு அடி­ப­ணிந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பின்­தள்­ளப்­பட்­டமை கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்….

Read More

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக துறைகளில் முன்னேற்றம் காணும் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில் நுட்ப இணை ஆணைக்குழுவின் கூட்டம் துருக்கியின் அங்காராவில் சனிக்கிழமையில் இடம் பெற்ற போதே இந்த உடன்பாடு காணப்பட்டது. இலங்கை குழுவிற்கு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் இந்த அமர்வில் கலந்து கொண்டதுடன், துருகிக்கியின் சார்பில் தேசிய கல்வி அமைச்சர் இல்மாஸ் இயாஸ் தலைமையிலான குழுவினர் கலந்து…

Read More