Headlines

இந்த நாட்டில் மீண்டுமோர் அழிவைக் காண சிலர் துடிக்கின்றனர்– றிஷாத் பதியுதீன்

இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (03) பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனவாதம் தான் இந்த நாட்டிலே 30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்தது. யாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கஇல்லை. இவ்வாறான யுத்தம் வருவதற்கு காரண கர்த்தாக்களாக, இன்று இனவாதக் கருத்துக்களைப் பேசியவர்களைப் போன்று, அன்று பேரினவாத சக்திகள் ஆட்சியைக் பிடிப்பதற்காக சுயநல கொள்கையோடு இனவாதக்…

Read More

இலங்கைக்கு பங்களாதேஷ் எதிர்ப்பு

இலங்கை பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்த விடுத்த கோரிக்கைக்கு  பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விஸ்தரிப்பதற்காக அனுமதி கோரியிருந்த நிலமையில்  அக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை விடுத்திருந்த கோரிக்கையில் பங்களாதேஷின் கடற்பரப்பின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும்  இவ்வாறு கடற்பரப்பினை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என பங்காளதேஸ் அறிவித்துள்ளது. தமது கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை…

Read More

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை…

Read More

சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியாவுக்கு 91 குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோலாலம்பூர் விசேட நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் றிஷாட் மலேசியா பயணம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று (25) அதிகாலை மலேசியா கோலாலம்பூர் பயணமானார். இன்று காலை கோலாலம்பூரில் மலேசிய இஸ்லாம் சே கட்சியின் தலைவர் டட்டோ சிறீ துவான் குரு ஹாஜி அப்துல் ஹாதி பின் அவாங் தலைமையில் கோலாலம்பூர் ஜலான் ரஜா லோட் இல் ஆரம்பமாகும் உயர்மட்ட மாநாடு ஒன்றில் அமைச்சர்  அதிதியாக கலந்துகொள்கின்றார். அதன் பின்னர் கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும் Global Leadership Award 2018 நிகழ்விலும் அமைச்சர் அதிதியாகப்…

Read More

லசந்தவின் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். 40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய…

Read More

புனித செபஸ்தியன் கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் விஜயம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸ், கொழும்பு,  புனித செபஸ்தியன் கல்லூரிக்கு  இன்று (09) விஜயம் செய்து, பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் றம்சி அவர்களும் பங்கேற்றிருந்தார்.  

Read More

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பெய்யாமல் மிக கடும் வறட்சி ஏற்படும். குறிப்பாக அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி, இந்தியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி…

Read More

ஒருபோதும் அரசு சமஷ்டியை வழங்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒருபோதும் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறையொன்றை வழங்காது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி அ.இ.ம.கா.வில் இணைவு

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி நிந்தவூரைச் சேர்ந்த ALA.ரசூல் நேற்று (18.01.2017) அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் முன்னிலையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டார்.

Read More

E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு 06-05-2015 முதல் அமுலானது. தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி தொழில் செயலகத்தில் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தார். இதற்காக புதிதாக கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தமது நிலுவையை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளலாம். வேலை கொள்வோரால் சம்பளத்தில் கழிக்கப்படும் தொகையைக் கூட உறுப்பினர்கள் அறிந்து கொள்ள முடியும். இலக்ட்ரோனிக் முறையில் பதிவாகி உள்ள சகல உறுப்பினர்களுக்கும் இந்த வசதியை தற்போது பெற்றுக்கொள்ளலாம்….

Read More

ACMC புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருகிறது

இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார். வவுனியா மதவாச்சி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு…

Read More