Headlines

ரமழான், தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு




கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 17ம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறும்.
உலமாக்கள், கதீப் மார்கள், ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள மற்றும் தக்கியா, ஸாவியா ஷரீஆ கவுன்சில் அன்ஜுமன் பாயிஸ் இ ரஸா மேமன் ஹனபி பள்ளி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இம்மாநாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
எனவே 17.06.2015 புதன் மாலை 6.27 மணி முதல் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்க்குமாறும், பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0112432110, 0115234044 (பெக்ஸ் 0112390783) 0777 316415 ஆகிய தொலைபேசி இலக்கங் களினூடகவோ அறியத்தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளி வாசல் கேட்டுக் கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *