Headlines

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59) இருவரும் சேர்ந்து தமது மகன்கள் லூகாஸ் லியோனார்டு(19) மற்றும் கிறிஸ்டோபர் (17) ஆகியோரை தேவாலய ஆலோசனைக் கூட்டத்தின்போது கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதில் மூத்த மகன் லூகாஸ் உயிரை இழந்தார். மேலும் கவலைக்கிடமான நிலையில் இளைய மகன் கிறிஸ்டோபர் இப்பகுதி மருத்துவமனையில்…

Read More

நட்ட ஈடு கோரும் சீன நிறுவனம்

கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்படி துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால், குறித்த சீன…

Read More

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி

வருகின்ற 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார். வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின்  அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Read More

முரண்பட்ட பாதையில் செல்வோரும் சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டும் நுரைச்சோலையில் அமைச்சர் றிஷாட் அழைப்பு..

சிறுபான்மை சமூகத்தின் பெரும்பாலானோர் ஒன்று பட்டு, ஓரணியில் இருக்கும்போது,நம்மில் சிலர் எதிரணியில் பயணிக்காமல் சமூகத்தை முன்னிறுத்தி, எதிர்கால விமோசனத்திற்காக சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் புத்தளம் நுரைச்சோலையில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.. மக்கள் காங்கிரசின் நுரைச்சோலை அமைப்பாளர் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளில் 90சதவீதமானவை…

Read More

மஹிந்த தலை­மையில் விசேட தீர்­மானம்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­ப­தியின் நிபந்­த­னை­க­ளையோ கட்­சியின் கொள்­கை­க­ளையோ மீறி செயற்­படவில்லை. எனவே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையை எதிர்கொள்­ளவும் எதிர்கால நட­வ­டிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டவும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் கூட்டு எதிர்க்கட்­சி யின் அனைத்து உறுப்­பி­னர்­களும் வெள்­ளிக்­கி­ழமை விசேட சந்­திப்பை நடத்த உள்­ளனர். ஆறு நாள் விஜ­யத்தை மேற்­கொண்டு தென்­கொ­ரியா சென்­றுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு நாளை வியா­ழக்­கி­ழமை நாடு திரும்­பு­கின்­றது. தென்­கொ­ரி­யாவில் வாழும் இலங்­கை­யர்­களை சந்­தித்து நாட்டில் தற்­போ­துள்ள…

Read More

இஸ்ரேலில் பலஸ்தீனர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

இஸ்ரேல் பலஸ்தீன் இடையே தொடர்ந்து பிரச்சினை வலுத்து வருகிறது. நேற்று (15) ஜெருசலம் பழைய நகர் பகுதியில் பலஸ்தீனர்கள் 2 பேரை இஸ்ரேலிய போலீசார் சுட்டுக்கொன்றனர். முன்னதாக நேற்று முன்தினம் (14) மாலையில், மேற்கு கரைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலஸ்தீனர்கள் 2 பேரை சுட்டுக்கொன்றனர். அதே போல் மேற்குகரையில் உள்ள சோதனை சாவடி அருகே பலஸ்தீனர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Read More

5 இந்திய மீனவர்கள் விடுதலை

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், அக்டோபர் 30ந்தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் மேல்முறையீட்டுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று…

Read More

‘இஸ்லாமிய நாகரீகம்’ மாணவி புஹாரி நபீலா எழுதிய நூல் வெளியீட்டு விழா

அப்துல் சலாம் யாசீம் கஹடகஸ்திகிலிய-முக்கிரியாவ புஹாரி நபீலா எழுதிய நூல் வெளியீட்டு விழா முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியால மண்டபத்தில் இடம் பெற்றது! மண் வீட்டில் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் இம்மாணவி ‘இஸ்லாமிய நாகரீகம்’ எனும் நூலை வெளியிட்டது வடமத்திய மாகாணத்திலேயே வெளியிடப்பட்ட முதல் நூல் எனவும் தெரிய வருகின்றது. தனது முயற்சியில் கிராமத்துக்கும், பாடசாலைக்கும் பெருமையை பாராட்டி கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நூல், அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் பயன்பெற வேண்டும் எனும் நோக்கில்…

Read More

கலப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள கலப்புக் கடலில் நேற்று சனிக்கிழமை (03), பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 2 தடவையும் இம்மாதம் 1ஆம் திகதி ஒரு தடவையும் ஆயுதங்கள் சிக்குண்டன. இவ்வாறு மீனவர்களின் வலையில் தொடர்ந்து ஆயுதங்கள் சிக்குவதால், கடற்படையின் மேற்கொண்ட தேடுதலின் போது, ரி-56 துப்பாக்கி, கைக்குண்டுகள் 2…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிதி ஒதுக்கீட்டில் கொங்றீட்ட இடப்பட்ட அமீனிய்யா அரபு கல்லூரியின் உட்பாதை திறப்பு விழா

குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அமீனிய்யா அரபு கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க கல்லூரியின் உட்பாதை கொங்ரீட் இட்டு செப்பனிடும் வேலைகள் பூர் தி அடைந்துள்ளது இந்த பாதையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் குளியாப்பிடிய…

Read More

ரவியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்; அமைச்சர் றிஷாத் கண்டனம்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீது கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தனது கண்டனத்ததை தெரிவித்துள்ளார் . இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து 16 பேர் காயமடைந்தது தனக்கு அதிர்ச்சியை தந்ததுடன் பாதிக்கப்ட்ட குடுபங்களுக்கு தனது அனுதாபத்தைத்தை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாது இருப்பதற்கு பொலிஸார் எப்போதும்…

Read More

ஒலிபெருக்­கிகள் மூலம் இடையூறு, ஏற்படுத்தும் முஸ்லிம்கள் – ACJU விடம் முறைப்பாடு

– ARA.Fareel- – நாட்டின் சில பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களில் ரமழான் மாத சமய வழி­பா­டுகள் ஒலிபெருக்­கிகள் மூலம் அதி­க­ளவு சப்­தத்­துடன் நடாத்­தப்­ப­டு­வது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பாடுகள் கிடைத்­துள்­ளன. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அருகில் பல பௌத்த பன்­ச­லைகள் இருக்கும் பிர­தே­சங்­க­ளிலும் இரவு நேர ரமழான் வழி­பா­டுகள் இவ்­வாறு நடாத்­தப்­ப­டு­வது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோ­லு­வ­தாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­களின் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளே மாத்­திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்­ளப்­பட…

Read More