Headlines

பட்டினியால் வாடும் மக்களின் தொகை குறைந்துள்ளது : ஐ. நா

உலகளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது . இது தொடர்பில் தமது அறிக்கையினை நேற்று ntspapl;Ls;s ஐ.நா அமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது,  கணக்கிடப்பட்ட இம்மக்களின் தொகை சரியாக 795 மில்லியன் அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 09 பேருக்கும் ஒருவர் வீதம் என உலகளாவிய ரீதியில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். உலகின் மக்கள் தொகை பெருகி, மோதல்கள்…

Read More

மஹிந்தவின் ஆட்சிக்கு அத்துரலியே ரத்ன தேரர் அதிருப்தி!

தேர்தலில் மகிந்தவின் ஜாதகத்தை விட மக்களின் ஜாதகம் பலமானது எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஜாதகத்தை பலப்படுத்தும் அளவுக்கு நாட்டு மக்கள் துரதிஷ்டசாலிகள் இல்லை. தற்போது எமக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு வரையறைப்படாது, அதில் இருந்து தூரச் சென்று அந்த சிறைகளில் இருந்து விலகி, மக்களுக்காக முன்னோக்கி செல்லும் யுகம் உருவாகியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட மகிந்த சிந்தனை இன்று அதனை…

Read More

சாய்ந்தமருது பிரதேசத்தில் பலஇடங்களில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைகள்

ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கத்தினையும் மௌலவி முபாறக் நிகழ்த்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதேசமயம் சாய்ந்தமருது கடற்கரை முன்றலில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இலங்கை தௌஹீத் ஜமாஅத்…

Read More

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பொது கூட்டம்!

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (18) வவுனியா, றோயல் கார்டின் மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜே. ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன், நகர சபை தவிசாளர்கள்…

Read More

மரண தண்டனை குறித்து, ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் – ஜோன் அமரதுங்க

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி ஒரு சில தினங்களில் அறிவிப்பார். மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு 90 வீதமானவர்கள் ஆம் என்றே கூறியிருக்கின்றார்கள். எனவே மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி விரைவில் அறிவிக்க உள்ளார். போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக…

Read More

வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மனு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் எஸ். லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் இன்றைய தினமும் மரபணு சோதனை அறிக்கை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்….

Read More

பெரும்பான்மையினச் சமூகம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்வதாகக்கூறும் தவறையே தமிழ்ச் சமூகமும் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆராயப்படவேண்டும் தமிழ்மிரர் ஆசிரியர் தலையங்கத்தில், (01.08.2017) சுட்டிக்காட்டுகின்றது

  கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் புதிதாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், நிச்சயமாக அலசப்பட வேண்டியனவாக இருக்கின்றன. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவே, அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வடக்கு முதலமைச்சர் உட்பட, முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் அனைவரும், அப்பிரதேச மக்களுக்கு ஆற்றிய சேவைகளை விட, தான் ஆற்றிய சேவைகள் அதிகம் எனக்குறிப்பிட்ட அமைச்சர், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை, சில அரசியவாதிகள், எட்டி உதைப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். காலாகாலமாக, இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கமாகிப் போனாலும்,…

Read More

கல்குடா சர்வதேச பாடசாலையின் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்குடா சர்வதேச பாடசாலையின் 10வது வருட பூர்த்தியும் 10வது மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சர்வதேச பாடசாலையின் தவிசாளரும் உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் , Dr.அப்தாப் அலி , திருமதி ஹயறுன்நிஷா அமீர் அலி சர்வதேச பாடசாலையின் தலைவர் கலீல் றகுமான் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். .

Read More

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக பெருவிழாவை அமைச்சர் ரிஷாட் அங்குரார்ப்பணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார். சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் இன்றும் நாளையும் ஏற்பாடு…

Read More

அவசரமாக கூடுகிறது ஐ.தே.க

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம் என்றும், வர முடியாதவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான காரணத்தை விளக்கி முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய…

Read More

கல்லூரி வரலாற்றில் முத்திரை பதித்த பாத்திமா எப்.எம்.

பிறவ்ஸ் முஹம்மட்) கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும் அதன் பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாத்திமா எப்.எம். கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக ஒலிபரப்பானது. அடுப்படிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பெண் சமுதாயம் இப்போது சகல துறைகளிலும் தங்களது இருப்பிடங்களை தக்கவைத்துள்ளனர் என்பதை இந்த வானொலி மூலமாக பாடசாலை மாணவிகள் நிரூபித்துக்காட்டினார்கள். ஒருநாள் சேவையாக ஒலிபரப்பான பாத்திமா எப்.எம். அனைவரது மனதிலும் பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை புடம்போட்டுக் காட்டியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக்…

Read More

அல்-அக்ஸா பள்ளி வாசலின் இமாம் வபாத்!

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுஊன் . பலஸ்தீன அல் அக்ஸா பள்ளிவாசலின் இமாம் வபாத் ஆகி விட்டார்கள். அவர்களுக்காக துவா செய்யுங்கள். அவர் இந்த உலக வாழ்கையை விட்டு போகும்போது கூட அவரின் முகத்தை பாருங்கள் எவ்வளவு பிரகாசமாக உள்ளது, மறுமையிலும் அல்லாஹ் பிராகசத்தை கொடுத்து சொர்க்கம் அடைய செய்ய நாம் துவா செய்வோம்.

Read More