Headlines

தாஜூடின் கொலை வழக்கு : சீ.சி.டி.வி ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்பிப்பு!




பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கிடைக்கப் பெற்ற சீ.சி.டி.வி( CCTV) ஆதாரங்களில் இருந்து 10 டி.வி.டிகள் (DVD) மற்றும் சி.டி(CD) பிரதிகள் கொழும்பு மேலதிக நீதவானிடம் பொலிஸார் நேற்று கையளித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி நாரஹென்பிட்டிய சந்தியில் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து இந்த சீ.சி.டி.வி (CCTV) ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் சீ.சி.டி.வி( CCTV) பிரிவிற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி டி.ஜி.கம்லத்திடம் இதற்கான மூல ஆதாரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சீ.சி.டி.வி( CCTV) ஆதாரங்கள் கைப்பற்றியுள்ளமை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *