Headlines

“ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசு தொடர்ந்தும் விடாப்பிடி” – முல்லைத்தீவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!

ஜனாஸா எரிப்பு விடயத்தில், அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியாக  இருந்து வருவதாகவும் இது தொடர்பிலான கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, வைத்தியர்களின் மேல் பழியைப் போட்டுவிட்டு வாளாவிருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல், மதக்கடமைகளை இல்லாமலாக்கவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு, முல்லைத்தீவில் நேற்று (24)  நடைபெற்றது.  இங்கு உரையாற்றிய  அவர் மேலும் கூறியதாவது,…

Read More

மன்னார் மறைமாவட்ட ஆயர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மரியாதைக்குரிய இம்மானுவல் பெர்ணாண்டோ அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர், இன்று மாலை (23) ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.    

Read More

வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த, மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, இன்று (23) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்ததனாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து புத்தளத்தில் வாகனப் பேரணி..!

கடந்த 33 வருடங்களாக, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசுச்  சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளத்தில் மாபெரும் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்து, வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்று…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு வவுனியாவில்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு வாக்களித்த, வவுனியா மாவட்ட மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு, வவுனியாவில் இன்று  (22) நடைபெற்றது. குறித்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

“ ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தாடல், சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது” – நாடாளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மன்னர் காலம்தொட்டு மதிக்கப்பட்டு வந்த ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்தனி கலாசாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசின் செயற்பாடுகளும் கொள்கை அமுலாக்கல்களும் அமைய வேண்டுமென அவர் மேலும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “…

Read More

“பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

அநியாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரின் விடயத்தில் தலையீடு செய்து, அவருக்கு நீதி பெற்றுக் கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பேருவளை, தர்கா நகரில், கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹஷீப் மரிக்காரின் விடுதலை…

Read More

“புதிய அரசியலமைப்பு சகல சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும்” – பாராளுமன்ற கன்னி அமர்வில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, இன்று காலை (20) இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “அமைச்சரவையின் கன்னி அமர்வில், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவெடுத்து, அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வருகின்ற அரசாங்கங்கள், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்துள்ளன. அதேபோன்று,…

Read More

“ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்” – புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததென்றும், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இதைவிட பாரிய வெற்றிகளைப் பெற முடியும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், வேப்பமடுவில் நேற்று (15) இடம்பெற்ற, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய…

Read More

‘விசாரணைகளின் பெயரால் என் மீது அரசியல் பழிவாங்கல்’ –  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செவ்வி!

52 நாள் அரசியலமைப்புக்கு எதிரான சட்டவிரோத ஆட்சிக்கு ஆதரவளிக்காமையும், எமது கட்சியின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலுமே, விசாரணைகளின் பெயரால் என்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கான சதிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியுடன் கைகேர்த்தமைக்கான காரணம் என்ன? பதில்:- அகில இலங்கை மக்கள்…

Read More

“யார் அமைச்சராவதென்பது எமது தீர்மானத்திலேயே உள்ளது” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பதான நிலைமை சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று மாலை (01) வவுனியா, பட்டாணிச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “மக்களின் ஆணையை…

Read More