Headlines

விபத்தில் சிக்க முன் டிரான்ஸ் ஏசியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது உறுதி!

டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை உரசியவாறு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 40 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்தில் சிக்க முன் அதன் இரு எஞ்சின்களுமே அவற்றிட்கான எரிபொருள் துண்டிக்கப் பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More

பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடி­வுகள் நேற்று வெளியா­கி­யுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு முன்­ன­தாக விண்­ணப்­பிக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட மாண­வர்கள் பாட­சாலை அதிபர் ஊடாக குறித்த விண்­ணப்­பங்­களை அனுப்ப முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்த மேல­திக விப­ரங்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்­சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம்… அமைச்சர் ரிஷாட், ஹஸன் அலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்!

சுஐப் எம்.காசிம்   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை இயங்கி பின்னர், “ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சியும் இணைந்து, “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இன்று காலை (10)…

Read More

வுதியில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு ; இதுவரை 21 பேர் மரணம்

கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற  ஷியா மசூதி பாரிய குண்டுவெடிப்பு சம்பம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த மசூதியில் சியாக்கள் சுமார் 150 பேர்,  தொழுகையில் ஈடுபடும்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு மிகுந்த சத்தத்தோடு வெடித்து சிதறியதாக சம்பவ இடத்தின் அருகே உள்ளவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் சவுதி பொலிசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்….

Read More

ஆண் சிசுவின் சடலம் மீட்பு.!

கண்டி, அம்பிட்டிய வீதியின் காண் ஒன்றில் இருந்து ஆண் சிசுவின் சடலத்தை இன்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கண்டிப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

 நூதனசாலைக்கு முன்பாக மரமுறிந்து விழுந்தது

கொழும்பு, நூதனசாலைக்கு முன்பாக பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள்

அஸ்ரப் ஏ சமத் லைலா டீன் உம்மா பௌன்டேசனினால்  நோன்பு காலத்தில் தெமட்டக்கொட பிரதேசத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் பொதிகளை வழங்கும் நிகழ்வு தெமட்டக்கொட அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.  காலாநிதி  ஹாரீஸ்டீன் ஏற்பாட்டில் இப் பொதிகள் வழங்கப்பட்டன. தெமட்டக்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டாா்.  இம்முறை ஏறாவுர் போன்ற பல்வேறு இடங்களி்வல் 2000 பொதிகள் நோன்பு நோற்பதக்காக ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.

Read More

வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கத்திற்கு அடிகல் நாட்டு நிகழ்வு.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இந்த நிகழ்விற்ற்கு பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பொதுசன மக்கள் தொடர்பு அதிகாரியுமான முத்து முஹம்மட், மீள்குடியேற்ற செயலணியின் வவுனியா மாவட்ட…

Read More

பாயிசுக்கு எதிராக பிரதியமைச்சர் அமீர் அலி குற்றப்பத்திரிகை

அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜே.பாயிசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை அனுப்பியுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம். எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனால் மேற்படி பாயிசை விசாரணைசெய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியினால் பிரதியமைச்சர் அமீர் அலி நியமிகக்ப்பட்டிருந்தார். ஏற்கனவே ஓழுக்காற்று குழுவின் தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலியினால் 13.03.2015திகதி பாயிசுக்கு எதிரான…

Read More

சோபித தேரரின் நலம் விசாரிக்கச் சென்ற மஹிந்த

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.   கடந்த பதினெட்டாம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடுமையான சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலனை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச குறித்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை தந்துள்ளார். இதன் போது இருவரும் சுமார் அரை மணிநேரம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்….

Read More