விபத்தில் சிக்க முன் டிரான்ஸ் ஏசியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது உறுதி!
டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை உரசியவாறு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 40 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்தில் சிக்க முன் அதன் இரு எஞ்சின்களுமே அவற்றிட்கான எரிபொருள் துண்டிக்கப் பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…
