Headlines

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை!– மஹிந்த ராஜபக்ச




உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவர்களின் உரிமையாகும்.

அதனை எந்த வகையிலும் பிழையாக கருத முடியாது.

வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்காதவர்கள் பற்றியே பிரச்சினை காணப்படுகின்றது.

வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு தரப்பும் பிளவடைந்திருக்கப் போவதில்லை.

எதிர்க்கட்சி எதிர்க்கட்சியேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *