ஆர்.எஸ்.எஸ். – பொது பலசேனா; ஆகிய தீவிரவாத அமைப்புகள் பேச்சு!
இந்தியாவின் கடும்போக்கு இந்து ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து தென்னாசியாவில் பௌத்த இந்து சமாதான வலயத்தை அமைக்கும் வகையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பொதுபலசேனா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இந்தியாவில் உள்ள பௌத்த அமைப்புக்களுடனும் தமது அமைப்பு பேச்சு நடத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார். ராஸ்ரிய சுவாயமசேவான் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி அமைக்க தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர்…
‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!
நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…
அம்பாறையில் அ.இ.ம.காவின் வாக்குகள்: புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல் கசிவு
முகம்மட்; அன்சார் – இறக்காமம் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விவகாரத்தை கையாளும் பிரிவின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறிப்பாக 1994ம் ஆண்டுகளுக்கு பின்னர் முகாவின் அசைக்க முடியாத…
முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (15/01/2020) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அங்கு தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக பேசினார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் கட்சி எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் ஆதரவாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். -ஊடகப்பிரிவு-
ஒக்ரோபர் 6 வரை ஜெயா சிறையில்
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பிணை கேட்டு, ஜெயலலிதா தரப்பில், கர்நாடகா உயர் நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று கூடிய சிறப்பு அமர்வு, இந்த மனு மீது விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகள் எனது கடமைகளில் தலையிட்டனர்
பொலிஸ் மா அதிபராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கடமைகளை பொறுப்பேற்றதிலிருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பல அரசியல்வாதிகள் கடமையின் போது தலையீடுகளை செய்தனர் என்று நேற்று ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். அரசியல் தலையீடுகளை நான் தைரியத்துடன் எதிர்கொண்டேன். எனினும் சட்டத்துக்கு அப்பால் சென்று செயற்பட மறுத்தேன். இதனால் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரான…
Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen!
Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen… My Brother Mr. Riyaj Bathiudeen was arrested by the Criminal Investigation Department while he was at his house in Puttalam on 14.04.2020 stating that he had connection with a suicide bomber with respect to Easter Sunday Attacks. Until now none of…
மானங்கெட்ட முஸ்லிம் நாடுகள்…!
– சிராஜுல்ஹஸன் – நபிகளாரின்(ஸல்) உருவத்தைக் கேலி சித்திரமாக வரையும் போட்டி அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. “அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்” எனும் அமைப்பு இதை நடத்தியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக இது நடத்தப்பட்டதாம். இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால் மன்னிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, உலக அளவில் முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு இந்தச் சுதந்திரப் பாதுகாப்பு இயக்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை….
ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விசேட பிரேரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்தார். இதன்போது ஏழு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பாதுகாக்கும் செயற்திட்டத்தை பாராட்டியும், இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்தல், இன நல்லிணக்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதன்போது அமைச்சர் பிரேம்ஜயந்த மேலும் உரையாற்றுகையில், ஒற்றையாட்சிக்குள்…
அ.இ.ம.கா. கல்முனை அலுவலகத்துக்கு தீவைப்பு
ஏ.எச்.ஏ. ஹுஸைன் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் குடியில் திறந்திருந்த தமது அலுவலகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் தீவைத்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாகப் போட்டியிடும் கலீலுர்றஹ்மான் என்பவரின் அலுவலகமே தீ வைக்கப்பட்டதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்தத் தீ பரவாமல் சமயோசிதமாக அணைக்கப்பட்டதாகவும் அலுவலகத்தில் இருந்த தேர்தல் விளம்பர சுவரொட்டிகள், மற்றும் பிரசுரங்கள் கட்டிடத்தின் சிறிதளவான பகுதி…
இந்த நாட்டில் மீண்டுமோர் அழிவைக் காண சிலர் துடிக்கின்றனர்– றிஷாத் பதியுதீன்
இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (03) பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனவாதம் தான் இந்த நாட்டிலே 30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்தது. யாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கஇல்லை. இவ்வாறான யுத்தம் வருவதற்கு காரண கர்த்தாக்களாக, இன்று இனவாதக் கருத்துக்களைப் பேசியவர்களைப் போன்று, அன்று பேரினவாத சக்திகள் ஆட்சியைக் பிடிப்பதற்காக சுயநல கொள்கையோடு இனவாதக்…
