Headlines

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான  வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm

Read More

நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்களிப்பும் அளப்பறியது: பிரதி ஊடக அமைச்சர்

நிறைவேற்று அதிகாரம்- அரசியலமைப்பு- சட்டம் நீதி மற்றும் ஊடகம் என்பவற்றினால் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி நடைபோடும் என பிரதி ஊடக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ஒரு அரசாங்கத்தை உருவாக்கத்தின் ஊடகம் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. அது நல்லபடியாக நடக்கவேண்டும். அரசியல்வாதிக்கு ஊடகம் மிகவும் அவசியம். அரசியல்வாதியின் ஒரு…

Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான, காத்தான்குடியைச் சேர்ந்த அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இவர் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 2011 நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

ரவிகருணாநாயக்கவின் இப்தார் நிகழ்வு (Photo)

– அஷ்ரப் ஏ சமத் – நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று (21ஆம் திகதி) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு  நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். இதில் கொழும்பு வாழ் 1000 பேர்  இராப்போசன வைபத்திலும் கலந்து சிறப்பித்தனா்.

Read More

இசிப்பத்தான கல்லூரியில் முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல் ; ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை

அஸ்ரப் ஏ சமத் -இசிப்பத்தான கல்லூரியின் உயர்தரம் கல்விகற்கும் முஸ்லிம் மாணவனுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பழையமாணவர் ஒருவர் அறைந்து காது வெடித்துள்ளது – குஸ்னி ஹக் – கல்கிசை இவர் கொழும்பு 5 இசிப்பத்தான கல்லூரியில் தரம் 1 இல் இருந்து தமிழ் மொழி முலம் கல்வி கற்று தற்பொழுது க.பொ.த. உயர்தரத்தில்; வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார். இம்; மாணவனுக்கு இக் கல்லூரியில் சிங்கள மொழி முலம் கல்வி பயின்ற பழைய மாணவர் ஒருவர்…

Read More

அமைச்சர் றிஷாத்தை வீழ்த்த சதி!

முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயாகுமென்று மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார். அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருவதை உணர்ந்துள்ள மு கா தலைவர் ஹக்கீம் அம்பாறை அரசியல்வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான ஊடகவியலாளர் மாநாடுகளை…

Read More

தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை! – மைத்திரி

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள்…

Read More

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிக வெப்பம் நோயாளிகள் திண்டாட்டம்!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 கட்டிடங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருக்கு அல்லது இரும்பிலான பொருட்களைக் கொண்டு குறித்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வெப்பம் காரணமாக குறித்த கட்டிடத்தினுள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெருந்தொகையான மருந்து வகைகளும் அழிவடைந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் மில்லியன் கணக்கான பணத்தினைக் கொண்டு அவசரஅவசரமாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடிமானது நோயாளர்களை தங்க வைப்பதற்கு…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட சில இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (30-09-2018) கல்குடா தேர்தல் தொகுதிக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களின் நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய மக்கள் பணிமனை கிளைக் காரியாலயத்தை வாழைச்சேனையில் திறந்து வைத்ததுடன், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடுகளுக்கு…

Read More

நவவி எம்.பி.தலைமையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு நாற்காலிகள் அன்பளிப்பு

புத்தளம் தள வைத்தியசாலைக்கு நாற்காலிகள் அன்பளிப்பு Puttalam YMMA வின் வேண்டுகோளின் பேரில் Colombo YWMA மகளிர் அணியினர் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு 17.7.2017 அன்று விஜயம் செய்து சக்கர நாற்காலிகள் (Wheel Chairs) வழங்கினார்கள். இந்த சக்கர நாற்காலிகளை வைத்திய அத்தியட்சர் Dr. நகுலநாதன், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஷபீக் ஆகியோரிடம் அன்பளிப்பு செய்தனர். இதில் புத்தளம் YMMA வின் அழைப்பினை ஏற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , புத்தளம்…

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் செல்லுங்கள் – ஹக்கீம் ; அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் செல்லுங்கள் -சஜித்

அஸ்ரப் ஏ சமத் கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அமைச்சுக்களின் படிகளேறி சீரழிகின்றனர் கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கும் வீடொன்றை பெற்றுக்கொள்வதற்காகவும், அல்லது தனது பிள்ளையை அரச பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காக அமைச்சுக்களின் படிகள் ஏறி ஏறி வரிசையில் காத்து நின்கின்றனர். ஆனால் இந்தப் பெண்களின் கனவன்மார்கள் தமது மனைவிமார்களை அமைச்சுக்களுக்கு அனுப்பி சீரழியவைத்து விட்டு அவர்கள் வீடுகளில் அல்லது வியாபாரத்தில் தங்கி நிற்கின்றனர். இந்தப்பெண்கள், வரிசையில் மணித்தியாலயக்ககணக்கில் சிலர் காத்துநிற்கின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன்…

Read More

தலைவர் ரிஷாட் திருமலை விஜயம் – ஆதரவாளர்களுடன் சுமுகமான சந்திப்பு!

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை, குச்சவெளி பகுதிகளுக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Read More