Headlines

நேட்டோ வீரர்களின் பயிற்சிக்குப் பதிலடியாக ரஷ்ய வடக்குக் கடற்படை முழு எச்சரிக்கையில்!

சமீபத்தில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எல்லையில்  தொடர் இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது வடக்கு கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறும் ஆர்டிக் வலயத்தில் பயிற்சியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சியானது வழக்கமான பயிற்சியே என்றும் இதற்கும் சர்வதேசத்தின் சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ரஷ்யத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஸ்புட்னிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யக் கப்பற்…

Read More

டேவிட் கேமரூன் முகத்தில் காரி துப்பிய, நைஜீரிய அதிபர்

லண்டனில் ஊழல் எதிர்ப்பு உச்சி மாநாடு நடைபெற இருந்த நேரத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ராணி எலிசபத்திடம்  ” உலகிலேயே ஊழலில் அற்புதமான நாடுகளாக நைஜீரியாவும் ஆப்கானிஸ்தானும் திகழ்கிறது ” என்று பேசியது வெளியாகியுள்ளது ” Nigeria and Afghanistan are fantastically corrupted states” – David Cameron இதற்கு நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி மின அழகிய பதிலை கேமரூனுக்கு கொடுத்துள்ளார். ‘கேமரூன் நைஜீரிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறு…

Read More

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் ஊடகவியலாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளும் மதவாதிகளும், சஹ்ரானின் தாக்குதலுடன்  என்னை தொடர்புபடுத்தி, எப்படியாவது…

Read More

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர்…

Read More

70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் டெங்கு காய்ச்சல்: 3 பேருக்கு நோய்த்தாக்கம்

ஒருவகைக் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் ஜப்பானில் கடைசியாக 1945ல்தான் கண்டறியப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு தெற்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களில் ஆண்டுதோறும் 200 பேர் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்படும்போதும் உள்நாட்டில் கடந்த 70 வருடங்களுக்குப்பிறகு மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் சமீபத்தில் உறுதி செய்துள்ளது. 20 வயதுடைய டோக்கியோ இளைஞன் ஒருவனும், இதன் வடக்கே உள்ள சைடமா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் இளைஞன் ஆகியோரும் இந்த நோய்த்தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் இவர்கள் மூவரும் டோக்கியோவில்…

Read More

விரைவில் எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்

வேறு மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக…

Read More

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை!– மஹிந்த ராஜபக்ச

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவர்களின் உரிமையாகும். அதனை எந்த வகையிலும் பிழையாக கருத முடியாது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்காதவர்கள் பற்றியே பிரச்சினை காணப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு தரப்பும் பிளவடைந்திருக்கப் போவதில்லை. எதிர்க்கட்சி எதிர்க்கட்சியேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில்…

Read More

கத்தாரில் சாக்கீர் நாயிக்

உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் சாக்கீர் நாயிக் அவர்களின் சொற்பொழிவு  கத்தாரில் 26.05.2016 வியாழக்கிழமை மாலை 8.00 மணிக்கு Katara’s Amphitheatre  இடம் பெறவுள்ளது. மாற்று மத சகோதரர்களுக்கும் தெரியப்படுத்தி உரையை கேட்பதற்கு உங்களுடன் அழைத்து வாருங்கள். தலைப்பு: Does God Exit? அனுமதி: இலவசம் தகவல்: எம். வை. இர்பான் www.fb.com/akpcq

Read More

இந்தியாவில் தோன்றிய அரசியல் மாற்றத்தினால் இலங்கையுடனான வர்த்தக உறவு அதிகரிக்கும்

இந்தியாவில் புதிய பிரதமர் பதவியேற்றமை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்களை ஏற்ப டுத்துவதோடு இலங்கை, இந்திய வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றமடையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இலங்கை வந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் உயர்மட்ட பிரதிநிதி குழுவின ருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் உரையாற்றும் போதே…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுக்கச்சேரியில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள், மற்றும் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முல்லத்தீவு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டு சில…

Read More

பூண்டுலோயாவில் விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

– சுரேன் – பூண்டுலோயா நகரில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய அம்பகஹாவத்த கெதர உதயணி என்ற பெண் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளார். பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா செல்வதற்கு பஸ்ஸில் ஏற வீதியை கடக்க முயன்ற போது தலவாக்கலையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியில் மோதியே குறித்த பெண் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பூண்டுலோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பூண்டுலோயா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு…

Read More

இலங்கையில் அடுத்த வருடம் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம்

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம் அடுத்த வருடம் இலங்கையில் அமைக்கப்பட உள்ளதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணிலை சந்தித்த நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஸ்டீவன் ஜொய்ஸ், வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே மற்றும் முதன்மை தொழிற்துறை அமைச்சர் நாதன் கய் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கல்வித்துறை அதாவது…

Read More