Headlines

மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும்: மேர்வின் சில்வா




வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அனைத்து மக்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டே வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளார்.

இதன் காரணமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பாரியளவில் நலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மலர்களை நோகடிக்காது தேன் எடுப்பதனைப் போன்று மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும்.

நாட்டின் சகல பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்படும் தொகையை விடவும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *