Headlines

துறைமுக இரகசிய தகவல்களை காணவில்லை!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரியல்; பந்து விக்ரமவின் பொறுப்பின் கீழ் இருந்த துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து இரகசியத் தகவல்கள் உள்ளடங்கிய கணனி ஹாட்டிஸ்க் நேற்றைய தினத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனுள் இலங்கையின் அனைத்து துறைமுகங்களுக்கும் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இரகசியத் தகவல்கள் அத்துடன் ஹம்மாந்தோட்டை துறைமுகம் சம்மந்தமான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை!– ஜே.வி.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது. ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது. ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின்…

Read More

சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல்.

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே அங்கு போராட்டங்கள் வலுவடைந்து தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தில் 1000…

Read More

இஸ்லாத்தை அவமதிக்கும் செயற்பாடு: ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி

நாட­ளா­விய ரீதியில் பாட­சா­லை­களில் மூன்றாம் தவணைப் பரீட்சை நடை­பெற்று வரும் நிலையில் மன்னார் கல்வி வல­யத்­தினால் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற தரம் 2 மற்றும் 3 க்கான இஸ்லாம் பாட பரீட்­சைக்­கு­ரிய வினாத்­தாள்­களில் பார­தூ­ர­மான எழுத்துப் பிழைகள் இடம்­பெற்­றி­ருந்த­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி தெரி­வித்­துள்ளார். குறித்த வினாத்­தாளில் ‘நபி’க்கு ‘நரி’ என்றும் ‘தாய்’க்கு ‘நாய்’ என்றும் அச்சு பிழைகள் ஏற்­பட்­டிருந்­த­தா­கவும் இது இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள…

Read More

சட்டக்கல்லூரி பரீட்சை: மும்மொழியிலும் வினாத்தாள்கள்!

சட்டக்கல்லூரி மாணவர்களின் பரீட்சைக்காக வழங்கப்படும் பரீட்சை வினாத்தாள் அரச மொழி கொள்கைக்கமைய மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அந்த கொள்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இது தொடர்பில் அமைச்சு கிடைத்த முதல் வாரத்திலேயே நான் நடவடிக்கை எடுத்தேன்….

Read More

மயில் சின்னத்தில் அம்பாரையில் தனித்து களமிறங்கும் மக்கள் காங்கிரஸ்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாரை மாவட்டத்தில், மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அம்பாரை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்) ஆகியோர், இன்று (19) அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், ஏற்கனவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தவகையில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ்….

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!

-முர்ஷித் கல்குடா- ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை (06) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 07 பேரும், சுயேட்சைக்குழு சார்பில் 08 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 01 நபரும்,…

Read More

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை புகழ்ந்த ஜே.வி.பி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்று ஜேவிபி தெரிவித்துள்ளது இதனை கொண்டு வந்த ஐக்கிய தேசியகட்சியே 40 வருடங்களின் பின்னர் அதனை நீக்கவேண்டும் என்று கோருவது வரவேற்கக்த்தக்கது என்று ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பாஸிஸ கொள்கைக்கு இட்டுசென்றுள்ளதாக குறிப்பிட்டார் அனுபவ ரீதியாக இதனை உணர்ந்தநிலையிலேயே மக்கள் அதனை விமர்சிக்க ஆரம்பித்ததாகவும் ஹேரத் தெரிவித்தார் இந்தநிலையில் நிறைவேற்று…

Read More

உலகப்போர் மூளும்: ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். களின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, வான்வழி தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

எதிர்வரும் தேர்தல் எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பாதுகாக்கும் தேர்தலாகும்_அப்துல்லா மஃறூப் எம்.பி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல அது எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேர்தலாகும் எனவும் இதனை பாதுகாக்க நாம் சரியான தலைமகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று (27) மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்…

Read More