Headlines

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை!– ஜே.வி.பி.




கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது.

ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது.

ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை.

மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின் அவை பகிரங்கமாகவே செய்யப்படும்.

அரசாங்கம் விழுந்துள்ள குழியிலிருந்து மீள்வதற்கு எந்தவொரு இழி செயலையும் செய்யத் தயங்குவதில்லை.

ஒவ்வொரு விதமான நபர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதன் நோக்கம் எதற்காக என்பதனை மக்கள் அறிவார்கள்.

குமார் குணரட்னம் நாட்டை விட்டு எப்படிச் சென்றார் நாட்டுக்குள் எப்படி வந்தார் என்பதனை பார்த்தால் அவர் அரசாங்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றார் என்பது தெளிவாகும் என விஜித ஹேரத், ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *