Headlines

லங்கா சதொசவில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை

ராஜபக்ச ஆட்சியின் போது லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் 5000 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் சதொச நிறுவனத்தின் பிரதான பதில் பொது முகாமையாளர் கே.ஆரியவன்சவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று கே.ஆரியவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனம் கணனிமயப்படுத்தப்பட்டமை, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய சுற்றுலா விடுதி, எரிபொருள் நிரப்பு நிலைய நிர்மாணம், தலைமைச் செயலகம் நவீனமயப்படுத்தப்பட்டமை, வர்த்தக கட்டிடம் நவீனமயப்படுத்தப்பட்டமை, இறக்குமதி…

Read More

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைக்கு சர்வதேச நாடுகள் உதவி தேசிய வர்த்தக சந்தைக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

இலங்கையின் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (யு.என்.டி.பி) ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய வர்த்தகச் சந்தைக் கண்காட்சி பண்டாரநாயக்க சர்வசே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை அவர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர் உரையாற்றியதாவது, இளைஞர் மற்றும் பெண்கள்  ,…

Read More

மாணவர்கள் மூவர் கைது!

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் 16 மற்றும் 14 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரவு வேளைகளில் வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைத்து அங்குள்ள பொருட்கள்மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனையடுத்து நேற்றைய தினம் (02) குறித்த மூன்றுமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர்கள்…

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More

ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்களை ஜனாதிபதி, பிரதமரின் பங்ககேற்புடன் திறக்க ஏற்பாடு. கூட்டுறவுத்துறைக்கு புதிய கொள்கை வகுக்கும் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மாகாண கூட்டுறவு அமைச்சர்கள்,…

Read More

அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்: ரணில் விக்ரமசிங்க

குரோதம் வன்முறைகளில்லாத புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் ஏற்படுத்த நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அனைத்துக்கட்சிகளினதும் ஒத்துழைப்பு இதில் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவை மக்களால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு பொலனறுவை நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்…

Read More

நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை தழுவினார்!

இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை…

Read More

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி வாமிலா (24) மரணம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரியினல் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும்  மாணவி ஒருவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி  மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி,…

Read More

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய போகும் மஹிந்த ராஜபக்ச – கயந்த கருணாதிலக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் எனத் தெரிந்து கொண்டே சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என அரசாங்கத்தினால் ஒரம் கட்டப்பட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் கூறுவது மனச்சாட்சிக்கு இணக்கமாகவல்ல. ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய சாத்தியமில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். சிரேஸ்ட…

Read More

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ். வாலிபர் தெரிவு!

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மஹாபிமாணி – 2014 என்ற தலைப்பில் கொழும்பு, மகரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். இதன் போது யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இலங்கையின் மிகச்சிறந்த கட்டிட நிர்மாணக் கலைஞருக்கான விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் பயணித்த கார் விபத்து

நேற்று (8) அதிகாலை 2:30மணிக்கு தம்புள்ளை பெல்வெகரையில்  லொரி ஒன்றுடன் திருமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்கள் தனது குடும்பத்தினருடன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் காயமடைந்த நால்வரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

நவி பிள்ளை ஓய்வு – ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(AD)

Read More