கால்நூற்றாண்டுகால கஷ்டங்களுக்கு கரம் கொடுத்தவர்..!
சொந்தமண் இழப்பு… சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம். சுதந்திரம் இழந்தோம், வீடுவாசல், விளைச்சல் நிலங்களை இழந்தோம். தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம். அகதிகளானோம், பஞ்சைகளாய், பாதசாரிகளாய் பொடிநடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம் போதாது. மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கான குடிமனையாகின. கால்நூற்றாண்டு காலம் நாதியற்ற வாழ்வு. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின….
