Headlines

கால்நூற்றாண்டுகால கஷ்டங்களுக்கு கரம் கொடுத்தவர்..!

சொந்தமண் இழப்பு… சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம். சுதந்திரம் இழந்தோம், வீடுவாசல், விளைச்சல் நிலங்களை இழந்தோம். தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம். அகதிகளானோம், பஞ்சைகளாய், பாதசாரிகளாய் பொடிநடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம் போதாது. மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கான குடிமனையாகின. கால்நூற்றாண்டு காலம் நாதியற்ற வாழ்வு. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின….

Read More

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதலாம் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது.முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050 ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Read More

சிசிலியாவிற்கு பிணை!

பினான்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவலைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும், 4 சரீரப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மாவட்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று (29) உத்தரவிட்டு்ள்ளார். இதேவேளை, இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கிலிருந்து இவர் விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து கோட்டை நீதிமன்றில் ,இவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு…

Read More

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழக முதல்வர் வழக்கு!

தாம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதாக அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டிருந்தார். இந்த தகவல் மூலம் சுப்பிரமணியன் சுவாமி அவதூறை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு வந்து சுப்பிரமணியன் சுவாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

Read More

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக ஞானரத்ன தேரர் தெரிவு

பௌத்த பீட சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் அனுநாயகத் தேரரான வண. வரகாகொடை ஞானரத்தன தேரர் இன்று மாலை  அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகாநாயக்கத் தேரராக தெரிவு செய்யப்பட்டார். அஸ்கிரிய பீடத்தின் பௌத்த தேரர்களது நிர்வாக சபையினர் ஒன்று கூடி அவரைத் தெரிவு செய்தனர்.  ஆஸ்கிரிய பீடத்தின் 21 வது மகாநாயக்கராக பதவிவகித்து மரணமான கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி அவர்களது இடத்திற்கே இவர் 22 வது மகாநாயக்கராகத் தெரிவானார். ராஜகருனா நவரத்தன அத்தபத்து வாசல…

Read More

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், நடைபவணி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமையையும் முன்னிட்டு மாபெரும் நடை பவணியானது பாடசாலை பிரதான நுழைவாயிலில் இருந்து ஆரம்பமானது. கிண்ணியா பிரதான வீதியூடாக ரகுமானியா நகர், துறையடி, மாஞ்சோலை சேனை வீதியூடாக மீண்டும் பாடசாலையை குறித்த பேரணி வந்தடைந்தது. பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் சமூகக் கல்விக்கான வலையமைப்பு  தலைமையில் நடை பெற்ற குறித்த பேரணியானது  “ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை…

Read More

துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பிரதிவாதிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிக்கா டி லிவேரா தென்னக்கோன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவை சுட்டுக்கொலை செய்தமை உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கெதிராக சட்ட மா அதிபர்…

Read More

ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது, துருக்கி திட்டவட்டம்

ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  அதன் விமானிகள் 2 பேர், பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை சிரியா படைகள் சுட்டுக்கொன்றன. மற்றொருவரை சிரியா படைகள்  பிடித்துச்சென்றன. ஆனால் அவரை ரஷியா மீட்டு விட்டது. இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு…

Read More

நிந்தவூர் பாடசாலை சமூகத்துடனான சந்திப்பு!!!

நிந்தவூரிலுள்ள பாடசாலைச் சமூகத்திற்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(14) நிந்தவூரிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறும், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது தவிசாளர், நிந்தவூரை பொருத்தமட்டில் கடல், வயல் சார்ந்த தொழில் துறைகளுக்கு அப்பால் கல்வி என்பது பாரிய…

Read More

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக்கைது…

Read More

ஒபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டமிட்டவர் கைது

தன்னை இயேசு கிறிஸ்து என கூறிக்­கொண்ட ஒருவர் ஒபா­மாவின் நாய்­களில் ஒன்றைக் கடத்திச் செல்ல முயற்­சித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடுக்­கப்­பட்­டுள்ளார். 49 வயது  ஸ்கொட் ஸ்டோக்கட் என்­ப­வரே வொஷிங்டன் ஹோட்­டலில் இரக­சிய பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டார். அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவின் செல்ல நாய்­களில் ஒன்­றான போவை ஸ்கொட் கடத்­து­வ­தற்­கான திட்டம் குறித்து இர­க­சிய தகவல் மூலம் தெரிய வந்ததாக பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அந்த நபரின் வாக­னத்தில் சில ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள்…

Read More

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளது காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் அது தொடர்­பான ஆவ­ணங்­களை கைய­ளிக்கும் நோக்­கிலும் கொழும்பில் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன் ஓர் அங்­க­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடை­பெற்­றது….

Read More