Headlines

பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது




கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தனது பிள்ளையை ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது பிள்ளையை பராமரிக்க முடியாமையினாலேயே இவ்வாறு ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயச்சித்தாக கைது செய்யப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 36 வயதுடைய தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *