Headlines

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு பிணை

எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும்  அவரை விடுவிக்குமாறும் எம்பிலிபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி குமாரி எம்.அபேரத்ன உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த பொலிஸ் அத்தியட்சகரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்துள்ளார்.

Read More

பொலிஸ் கெப் புகையிரதத்தில் மோதி விபத்து

அம்பலங்கொட – கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது வாகனத்தின் இயந்திரம் செயல் இழந்துள்ளது. பிறகு அதில் இருந்த பொலிஸார் இறங்கியுள்ளனர். பின்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, சுற்றலா போகாதீர்கள்..!

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஒரு சிலர் சுற்றுலாக்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் நபர்களினால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரநாயக்க பகுதிக்கு பலர் வெறுமனே ஒர் சுற்றலா செல்வதனைப் போன்று சென்று வருவதாகவும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நிவாரணங்களை வழங்குவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

முதியோர் மற்றும் முடியாதோர் இனி இலகுவாக ஹஜ் ,உம்ரா!

அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான காபா ஆலயத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் புனித உம்ரா பயணத்திற்காக செல்கிறார்கள். அவ்வாறு செல்லக்கூடிய மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உம்ரா செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் நான்கு சக்கர புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் அமர்ந்த படியே புனித உம்ரா கடமையை நிறைவு செய்யலாம், புதிய வாகனத்தை மக்காவின் தலைமை…

Read More

இஸ்ரேலிய காவல்துறை- பாலஸ்தீன இளைஞர்கள் மோதல்

ஜெருசலேத்தில் உள்ள அல்-அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். யூதர்களின் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய காவல்துறையினர் அங்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாலஸ்தீன தரப்பினர் கூறுகின்றனர். கிழக்கு ஜெருசலேத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போதே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவுவதாக கூறப்படுகின்றது. எனினும் ‘பழைய நகரம்’ பகுதியில்…

Read More

100 நாள் வேலைத்திட்டம் வெற்றி: ஹர்ஷ டி சில்வா

நூறு நாள் வேலைத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, ஜனநாயக நல்லாட்சி உருவாக்கம், திருட்டுக்கள், ஊழல் ஒழிப்பு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களும் வெற்றிகரமாகி மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை திட்டமிடல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா இவ்வாறு தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பது அரசின் நோக்கமாகும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கி வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இடைக்கால…

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு (படங்கள் இணைப்பு)

எ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய  அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று (11) வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார். அத்துடன் ,தற்காலிகமாக  வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட  கிராம சேவகர்களுக்கும் அமைச்சர் நிரந்தர நியமன கடிதங்களையும் வழங்கி வைத்தார்.

Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பாறுக் சிகான் 2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார் நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.  இதேவேளைஇ இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால்இ…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

“அமீர் அலி பவுண்டேஷனின்” ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கெளரவிக்கும் நிகழ்வும், பொது தொடர்பாடல் சேவையில் சேவையாற்றிய கலீல் அவர்களுக்கு சிஹாப்தீன் மெளலவி விருது வழங்கும் நிகழ்வும் மீராவோடை, அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பிரதித் தலைவர் வைத்தியர் அப்தாப் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை…

Read More

சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் – சம்பந்தன்

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் குறித்த உங்களது…

Read More

‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…

Read More

ஏறாவூர் மருந்தகத்தில் கொள்ளை; இரு இளைஞர்கள் கைது

ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மருந்தகத்தினுள் கூரை வழியாக நுழைந்த மர்ம நபர்கள், 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 21 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை என்பவற்றை திருடிச் சென்றதாக முறையிடப்பட்டது. இக் கொள்ளைச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது. மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு விசாரணைகளின்…

Read More