Headlines

சம்மாந்துறையில் மைத்திரி பங்கேற்ற, தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (படங்கள்)

யு.எல்.எம். றியாஸ் எதிரணிகளின் ஜனாதிபதி  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (28.12.2014) மாலை சம்மாந்துறை வருகை  சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் வெள்ளத்தினை  படங்களில் காணலாம்.

Read More

இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் பல்கலைக்கழக பட்டதாரியான இளைஞர்

இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார். மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்கள் செயலிழந்த நிலையில், அவரது தாய் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் அங்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்…

Read More

இரத்தக் கறை படிந்தவர்கள் தேங்காய் உடைப்பது சாபக்கேடு

‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால்…

Read More

அடுத்த ஆண்டுக்குள் மின் கடவுச்சீட்டு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோசடிகளை தடுக்கும் முகமாக அடுத்தஆண்டின் தொடக்கத்தில் மின்- கடவுச்சீட்டுக்களை வெளியிட நடவடிக்கைகள்முன்னெடுக்க வேண்டும் என வடமேல் அபிவிருத்தி மற்றும்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார். இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் மற்றும் விசாஸ்டிக்கர்களுக்கான அறிமுகப்படுத்தல் நிகழ்வின் போது இதனை நேற்றுதெரிவித்துள்ளார். இந்த நிகழ்வானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கேட்போர் கூடத்தில்நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்மேற்பார்வையின் கீழ் இந்த புதிய தொழில்நுட்பங்கள்…

Read More

செல்பி எடுத்தால் தோல் பாதிப்பு ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செல்போனில் ‘செல்பி’ எடுப்பது தற்போது ‘பே‌ஷன்’ ஆகிவிட்டது. சிலர் ‘செல்பி’ எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடிக்கடி ‘செல்பி’ எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செல்பி எடுக்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும்….

Read More

மாவடிப்பள்ளியில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள் வழங்கி வைப்பு!

அ.இ.ம. காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில் விசேட முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்…

Read More

இலங்கை வரும் நோர்வேயின் வெளியுறவு செயலர்

நோர்வேயின் வெளியுறவு அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் கட்ரோம் எதிர்வரும் 31ம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கையில் ஜூன் 2ம் திகதி வரை தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வரவுள்ள நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்டேயின் விஜயத்துக்கு முன்னோடி விஜயமாகவே டோர் கட்ரோமின் விஜயம் அமையவுள்ளது. கட்ரோம், இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் மலிக்…

Read More

சிறைச்சாலைகளில் நடத்திய திடீர் சோதனைகளில் 73 கையடக்க தொலைபேசிகள்- 54 சிம்கள் கைப்பற்றப்பட்டன

இவ்வருடம் சிறைச்சாலைகளை திடீர் சோதனைகள் நடத்தியதில் இதுவரை 73 கையடக்க தொலைபேசிகளும் 54 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அனைத்து சிறைச்சாலைகளிலும் இத்திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 73…

Read More

115 ஆசனங்களுக்கு அதிகம் பெற்று ஐ.தே.க. வெல்லும் – லக்ஷ்மன் கிரியெல்ல

இந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 115க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்ளும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு 55 ஆசனங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நாடுபூராகவும் உள்ள விகாரைகளுக்கு சென்று வாக்கு சேர்க்க முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐ.தே.க.வின் தலைமையகத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மூன்றாவது நாளாக மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் நேற்று (24)  இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான்…

Read More

கொலம்பியாவில் நிலநடுக்கம்

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீட்டர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில்    பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Read More