Headlines

ஒபாமா மீது பிடல் காஸ்ட்ரோ பாய்ச்சல்

தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க…

Read More

றோ அதிகாரி கைது

இந்தியப் கடற்படையில் கடமைபுரியும்  இந்திய புலனாய்வுதுறை அதிகாரியொருவரை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது. டான் செய்தி சேவையின் தகவல்களின்படி பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட றோ அதிகாரி, மேலதிக விசாரணைகளுக்காக  இஸ்லாமாபாத் நகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். பலூசிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுடன்; தொடர்புபட்டிருப்பதுடன் பலூசிஸ்தான் பிரிவினைவாதக் குழுவுடன் இந்த உளவாளிக்குத் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த உளவாளி,…

Read More

பாகிஸ்தான் தாக்குல் – சுமார் 60 பேர் பலி

பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதியிலுள்ள அனைத்து…

Read More

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால் கலவரங்கள் ஏற்படலாம் – ட்ரம்ப்

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் குடி­ய­ரசுக் கட்சி தன்னை நிய­மிக்­கா­விட்டால், கல­வ­ரங்கள் ஏற்­ப­டலாம் என்று தாம் நினைப்­பதா­க டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். குடி­ய­ர­சு­ கட்சி சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தேர்­தலில் முன்­னணி­யி­லி­ருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடு­மை­யான வார்த்தை பிர­யோ­கங்­களால் குடி­ய­ரசுக் கட்சி, அதன் பேர­வையில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மற்­றொ­ரு­வரை முன்­மொ­ழிய வாய்ப்­பி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. ஜன­நா­யகக் கட்­சியைப் பொறுத்­த­வரை ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்­ன­ணியில் உள்ளார். அமெ­ரிக்க  ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 8 ஆம்  திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி…

Read More

கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி

இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று (13) சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான அவர் சிகிச்சை…

Read More

தென் கொரியாவை கைப்பற்றுவோம்: வட கொரியா மிரட்டல்

வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதற்காக சமீபத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தியது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இதற்காக இரு நாட்டு படைகளும் கொரிய கடற்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. நாளை போர் ஒத்திகை முழு வீச்சில் தொடங்குகிறது. இந்த நிலையில் வட கொரியா ராணுவம்…

Read More

பாலஸ்தீனிய பெண்ணுக்கு உலகின் சிறந்த ஆசிரியை பரிசு

குழந்தைகளுக்கு விளையாட்டினூடே கற்றல்திறனையும் அதிகரிக்கும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக பாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்களுடன் கூடிய உலகின் சிறந்த ஆசிரியை பரிசு வழங்கப்பட்டது. கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறந்து நிர்வகித்துவரும் சன்னி வர்க்கி தனது சொத்துகளில் சரிபாதியை உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு உதவிடும் நோக்கில் தானமாக வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த (2015) ஆண்டில் உலகின்…

Read More

ஆங்சான் சூகி மியான்மர் அதிபராக மாட்டார்

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேல் சபை, கீழ் சபை மற்றும் ராணுவம் மூன்றும் தன்னுடைய தரப்பிற்கு ஒரு அதிபர் வேட்பாளரை மார்ச் 17-ம் தேதிக்கு முன்பாக தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மார்ச் 17-அன்று பாராளுமன்றத்தில் அந்த பெயர்களை தாக்கல் செய்யப்படும். பின்னர் 664…

Read More

வடகொரியாவுக்கு ஆதரவு இல்லை – சீனா திட்டவட்டம்

வட­கொ­ரி­யாவின் அணு ஆயுத மற்றும் ஏவு­கணைத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கப் போவ­தில்­லை­யென சீனா தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து சீன வெளி­யு­றவுத் துறை அமைச்சர் வாங் யி  நேற்று முன்­தினம் (8) தெரி­வித்­துள்­ள­தா­வது, நாட்டு வளர்ச்­சி­யையும், பாது­காப்­பையும் மேம்­ப­டுத்த வட­கொ­ரியா விரும்­பினால் அவர்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க நாங்கள் தயா­ராக இருக்­கிறோம். இருந்தும், கொரிய தீப­கற்பம் அணு ஆயுத ஆபத்­தில்­லாத பகு­தி­யாக விளங்க வேண்டும் என்­ப­தற்கு நாங்கள் மிகுந்த முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கிறோம். எனவே, வட­கொ­ரி­யாவின் அணு ஆயுதத் திட்­டங்­க­ளுக்கோ, அந்த ஆயு­தங்­களை…

Read More

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்  20 பேருக்கு இன்டர்போல் வலை

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிகப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இருபது பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்ககளுடன் தொடர்புடைய இவர்கள் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலை ஐஸ் மஞ்சு என்பவரும் இதில் அடங்குகின்றார். நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலி, சுவிட்சர்லாந்து,…

Read More

பஸ்ஸுடன் மோதியது சாரதியற்ற கூகுள் கார்

கூகுள் நிறுவனத்தின் சாரதியற்ற காரொன்று பஸ் ஒன்றுடன் மோதிய சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ளள வீதியொன்றில் பெப்ரவரி 14 ஆம் திகதி இக் கார் சென்றுகொண்டிருந்தபோது பயணிகள் பஸ் ஒன்றுடன் மோதியதாகவும் இவ் விபத்து தொடர்பான சில பொறுப்புட மைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் நேற்று முன்தினம் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ஸர்கள், கெமராக்கள் பொருத்தப்பட்டுளள்ள Lexus SUV ரகத்தைச் சேர்ந்த இக் கார், கலிபோர்னியாவின் மவுட் வியூ நகரிலுள்ள…

Read More

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக்கைது…

Read More