Headlines

எமது அகதிக் கொள்கை சரியானதே: விடாப்பிடியில் மொரிசன்

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அகதிக் கொள்கையை கடுமையாக கடைப்பிடித்தமை காரணமாகவே இந்த வருடத்துக்குள் ஒரு படகு மாத்திரமே அவுஸ்திரேலியாவுக்குள் வந்தது. எனினும் கடந்த வருடத்தில் நூற்றுக்கணக்கான அகதிப் படகுகள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்ததாக மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கையின் 157 அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவையும் மொரிசன் நியாயப்படுத்தியுள்ளார். எனினும் குறித்த 157 அகதிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு இருக்கும் என்பதால்…

Read More

நிலைமை இஸ்ரேலுக்கு எதிராக இருந்தால் ?

– அபூஷேக் முகம்மட் – 1.நெடன்யாஹுவின் மனைவியும் அவரது குழந்தையும் ஹமாஸால் படுகொலை செய்யப்படுகிறார்கள்… 2.அல்லது, இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பில் முக்கிய ஒருவரது மனைவியும் பிள்ளையும் ஹமாஸால் படுகொலை செய்யப்படுகிறார்கள்… 3.இப்போது இஸ்ரேலின் நிலைமை எப்படி இருக்கும்? இஸ்ரேல் ஹமாஸுக்கு எப்படி பதிலடி கொடுக்கும்? இப்படி நடந்தால் இஸ்ரேல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா ? 4.உலகமே மௌனமாக இருந்தாலும் அரபு சியோனிஸ்டுகள்கள் வாய் திறக்க ஆரம்பிப்பார்கள் … 5.கலாநிதி அப்துல்லாஹ் நபீசி கூறுவது போன்று அரபு சியோனிஸ்டுகளுக்கு…

Read More

மக்காவிற்குச் செல்ல எங்களிடம் உதவிகேட்டனர் முஸ்லிம்கள்! BBS

புனித மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக செல்லவுள்ள முஸ்லிம்கள், தங்களுக்கு சில அமைச்சர்களின் தலையீடுகளினால் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தங்களது பொது பல சேனா அமைப்பில் முறைப்பட்டு, மக்காவுக்குச் செல்வதற்காக ஆவன செய்து தருமாறு கேட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பணிப்பாளர் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார். முஸ்லிம்கள் சிலர் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்திற்கு வந்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைத் தாங்கள் சந்திக்க வந்தாகவும், அவருடன் கலந்தாலோசிக்க வந்ததாகவும், தான்…

Read More

வியட்னாமில் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – வியட்னாம் கூட்டு வர்த்தக உப கமிட்டி உத்தியோகபூர்வ நடைமுறைக்கு வந்தது!

முதல் முறையாக வியட்னாம் –  இலங்கை இடையிலான உத்தியோகபூர்வ கூட்டு வர்த்தக உப கமிட்டிக்கான (Joint Trade Sub Committee) செயல்முறை ஆகஸ்ட் 21 ஆம் திகதி   வியட்னாம் ஹனோய் நகரில் வைத்து நடைமுறைக்கு வந்தது.      வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டு வர்த்தக உப கமிட்டிக்கான   செயல்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு வியட்னாம் அரசு  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விசேட அழைப்பை விடுத்திருந்தது. அதன் பொருட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த…

Read More

இஸ்ரேல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகள்

இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் போராளிகளுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர எகிப்தில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று, இடையில் போர் நிறுத்தமும் ஏற்பட்டது. பின்னர் ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதில் ஹமாஸ் ராணுவத் தளபதி மொஹம்மட் டெய்ஃப் என்பவரின் மனைவியும் மகளும் பலியானார்கள். அவர்களுடன் மேலும் சில பொதுமக்களும் இறந்தனர். இந்நிலையில் இன்று இஸ்ரேலில் உள்ள பென்…

Read More

“ஐஸ் வாளி சவால்” ஜனாதிபதி, மேர்வின், ஹிருணிக்காவுக்கு அழைப்பு!

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்துள்ளார். மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஐஸ் வாளி குளியல் காட்சியை தன்னுடைய பேஸ் புக் (முகப்புத்தகம்) பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளார். இந்த ‘ஐஸ் வாளி சவால்’ உலகளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டுவந்துள்ளது. மூன்று…

Read More

கொரிய நாட்டு தூதுக்கழு வாழைச்சேனைக்கு விஜயம்!

வாழைச்சேனை நிருபர் கொரிய நாட்டின் நிதி உதவியில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட ‘கொய்க்கா’ வேலைத்திட்டத்தின் கல ஆய்வினை மேற்கொள்ளும் கொரிய நாட்டு தூதுக்கழு நேற்று (21) வருகை தந்தனர். வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஓட்டமாவடி பிரதேச சபையின் சபையின் செயலாளர் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களையும் சந்துத்து தமது இறுதி அறிக்கையினை தயாரிக்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையை ஊடருத்துச்செல்லும் வடிகான் தொடர்பான குறை நிறைகளை கேட்டறிந்ததுடன்…

Read More

இலங்கை பாதுகாப்பு சேவைகள் கல்லூரி குழு துபாய் விஜயம்!

ஏ.சீ.எம். சப்ரி இலங்கை பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பயிலும் இலங்கை முப்படைகளைச் சேர்ந்த 20 பேர்களைக் கொண்ட உத்தியோகத்தினர் குழு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றினை 12.08.2014 தொடக்கம் மேற்கொண்டுள்ளனர். 22.08.2014 வரை துபாய் மற்றும் அபுதாபியில் தங்கி இருக்கும் இச்சுற்றுலா குழு நேற்று (20) துபாயில் உள்ள பிரதித் தூதுவராலயத்திரற்கு விஜயம் செய்தனர். துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவர் M.M அப்துல் ரஹீம் மற்றும் தூதுவராலய அலுவலர்கள், இலங்கை குழுவினரை வரவேற்றதுடன், அப்துல்…

Read More

ஆபிரிக்க நாட்டினரின் வருகைக்கு பின் வீசா இடைநிறுத்தம்

எபோலா வைரஸ் பரவுகையை அடுத்தே நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான வருகைக்கு பின் வீசாவை இடைநிறுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நைஜீரியா, கியூனியா, சியாராலியோன், லிபியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கே இந்த தடை உடனடியாக அமுல் செய்யப்படவுள்ளது. இலங்கை சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

Read More

ஜனாதிபதி மஹிந்த உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி – பில்கேட்ஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கையின் ‘நனசெல’ நிகழ்ச்சித் திட்டம், கிராமிய மட்டத்திற்குரிய மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப செயற்திட்டத்திற்கான விருதினை. பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் மன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி பிரான்ஸ், லியோனில் மன்றத் தலைவர் கேட்ஸ் தலைமையில் நடைபெற்றது. விருதை வழங்கி வைத்ததை தொடர்ந்தே அவர் சர்வதேச நூலகர்கள் மற்றும் கல்விமான்கள் முன்னிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அபிவிருத்தியின் போது முகம் கொடுக்க வேண்டிய…

Read More

நவாஸ் ஷரீப் பதவி விலகும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை:இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷரீப் விலகும் வரை, நேற்று புதன் கிழமை அரசுடன் தான் தொடங்கியிருந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சிப் பிரமுகர் இம்ரான் கான் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடையே பேசிய இம்ரான்கான்,நவாஸ் ஷரீப் பதவி விலகும் வரை தான் தனது போராட்டத்தை விடப்போவதில்லை என்று கூறினார். பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற அவரது கோரிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. இம்ரான் கானும், தாஹிர்…

Read More

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானம்: சோபித தேரர்

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் நீதியான சமூகத்திற்கான இயக்கம் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளரான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதை மையமாக கொண்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது பிரசாரத்தினை ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இந்தக் கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தங்களின் பின்னால் அணிதிரளும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டை சிறி நாகவிகாரையில் இடம்பெற்ற…

Read More