Headlines

சபாநாயகராக கரு ஜெயசூரிய?

எட்டாவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான கருஜயசூரியா சபாநாயகராகத் தெரிவு செய்யப்படலாம் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரியா சபாநாயகராக தெரிவாகலாம். இதேபோல் பிரதிசபாநாயகராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.

Read More

சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது : மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவி குறித்து சமலிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லையெனவும், அது பொய்யான தகவலென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…

Read More

வினாப் பத்திரங்களை திருத்தும் பணிகள் செப்டம்பர் 09 – 14 வரை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 38 பாடசாலைகளில் இப்பணி இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள 2907 நிலையங்களில் நடைபெற்ற தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரத்தி 926 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப்பத்திரங்களை…

Read More

தொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்!

கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை. சவுதி அரேபியன் ஏர் லைன்ஸின் விமானியின்…

Read More

அமெரிக்காவின் சதித்திட்டமே உள்ளக விசாரணையாகும்

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் எந்­த­வொரு விசா­ர­ணையும் தேவை­யில்லை. தற்­போ­தைய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள உள்­ளக போர்க்­குற்ற விசா­ர­ணை­யா­னது அமெ­ரிக்­காவின் சதித்­திட்­ட­மாகும். இது நாட்­டுக்கு ஆபத்­தா­னது என சிரேஷ்ட ராஜ­தந்­தி­ரி­யான தயான் ஜய­தி­லக்க தெரிவித்­துள்ளார். அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். மற்­ற­படி போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இதற்­கான பரி­கா­ர­மாக அமை­யாது என­வும் ­கு­றிப்­பிட்­டுள்ளார். ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்வி ஒன்­றி­லேயே தயான் ஜய­தி­லக்க மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.குறித்த செவ்­வியில் அவர்­தொ­டர்ந்து கூறியுள்ளதாவது,உலகின் எந்­த­வொரு நாடும்…

Read More

மஹிந்த நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதி: எஸ்.பி

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய  திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். “இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய…

Read More

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில் பலர் படுகொலை

வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமை யாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வெளியிடங்களில் உள்ள கல்லறைகளில் மேல் பாகம் திறக்கப்பட்டு அந்த கல்லறைகளுக்குள் மறைத்து வைக்கப்…

Read More

நீதிமன்றம் செல்லும் தேர்தல்கள் ஆணையாளர்!

நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பான முறைப்பாடுகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார காலத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பாக சுமார் 1156 முறைப்பாடுகளுக்கெதிராக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்வது இதுதான் முதற் தடவையாகுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார். இதன்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் பரிசீலனை…

Read More

ஜனாதிபதிக்கும் முன்னணி கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று காலை  இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார். இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய…

Read More

பாலித்த தேவரப் பெருமவின் புதல்வர் உயிரிழந்தார்

அளுத்கம, பேருவளை கலவரத்தின் போது முஸ்லிம்களுக்காக போராடியவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  பாலித்த தேவரப் பெரும அவர்களின் புதல்வர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. 25 வயது ஷான் தேவரப் பெரும என அறியப்படும் இவர் கடந்த சில காலமாக சுகயீனமாக இருந்து வந்ததுடன் நேற்று  மாலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகிறது. இலங்கை முஸ்லிம்களின் சகோதரகாக வாழ்ந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்  பாலித்த தேவரப் பெரும அவர்களுக்கு acmc.lk வாசகர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

பொதுபலசேனாவின் மன்னிப்புக் கோரிக்கை நிராகரிப்பு

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் பொதுபலசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபல சேனாவினர் தலைக்கனம் கொண்டு அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். அரசாங்க உயர்மட்டமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் அவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்நிலையில் இனவாத பொதுபலசேனாவின் செயற்பாடுகளை கண்டித்த வட்டரெக விஜித தேரரை ஒளித்து வைத்திருப்பதாக கூறி பொது பல சேனாவினர், றிஷாத் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அலுவலகத்தினுள் புகுந்து அடாவடித்தனம்…

Read More

வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் – றிஷாத் பதியுதீன்

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு மிக அதிக வாய்ப்பு காணப்பட்டது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஆர்வத்துடன் வாக்களித்திருப்பின் மூவரும் வெற்றி பெற்று கடந்த 26 வருடங்களாக எம்.பி ஒருவர் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலை மாறி நீங்கள் எல்லோரும் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். எனினும் அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்வோம். இத்தேர்தலில் நாடு பூராகவும் முஸ்லிம்களும்…

Read More