Headlines

‘105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது’

விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது. அப்போது விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டு பிடித்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தை தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் சக்கரம்…

Read More

சீனி, உருளைக்கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சந்தையில் கிடைப்பதாலும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்…

Read More

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட பலர் விபத்தில் பலி

மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐவர் இதுவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

முழு பாரா­ளு­மன்­றத்தையும் அர­சாங்­க­மாக மாற்­ற­வுள்ளோம் – பிரதமர்

புதிய பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் தமக்கு வரும் கேள்­வி­க­ளு க்கு பதில் அளிக்கும் வகையில் கட்­டா யம் பாரா­ளு­மன்ற ஆச­னத்தில் அமர்ந்­தி­ரு க்க வேண்டும். இதற்­கான விசேட கட்­ட­மைப்­பினை நாம் கொண்டு வர­வுள்ளோம். இதன்­ பி­ர­காரம் அமைச்­சர்­க­ளுக்­கான வெளிநாட்டு பய­ணங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். மோதிக் கொண்­டி­ருந்த இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்று சேர்ந்­துள்­ளன. இது நாட் டின் வர­லாற்று புரட்­சி­யாகும். மேலும் நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும்…

Read More

பிரதி மற்றும் இராஜாங்க முஸ்லிம் அமைச்சர்களின் விபரம்

இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம் பைசல் முஸ்தபா – உள்ளுராட்சி பிரதியமைச்சர்கள் அமீர் அலி – கிராமிய பொருளாதாரம் பைசல் காசிம் – சுகாதாரம் முகம்மட் ஹரீஸ் -விளையாட்டு

Read More

அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் அழைப்பு

கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என இன்று தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்ட கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் முன்றலில் இடம் பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்த வேண்டும்…

Read More

”இஸ்லாமியர்கள் வேண்டாம், கிறித்தவர்களை மட்டுமே ஏற்போம்”

பிரான்ஸ் நாட்டிற்குள் கிறித்துவ மதத்தை சேர்ந்த அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என அந்நாட்டு மேயர்கள் வெளியிட்ட கருத்திற்கு உள்துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 24 ஆயிரம் அகதிகளுக்கு குடியமர்வு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பை சில மாநகர மேயர்கள் வரவேற்றிருந்தாலும், சில மேயர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்….

Read More

தவறவிடப்பட்ட நல்லிணக்கம், வலுவான முறையில் முன்னெடுக்கப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

தேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப் பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை தோற்றுவிப்பதற்குப் பொருத்தமான சூழல் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கேற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் முன்வைக் கப்பட்ட கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதற்கமைய உச்ச சட்ட வாக்கத்தைக்…

Read More

கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை: மனோ

அமைச்சர் என்ற முறையில் உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து நீக்குவேன். அதை விடுத்து வெறுமனே அமைச்சரவை வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கும் ஒரு அமைச்சர் இருகின்றார் என்று காட்டும் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தனது அமைச்சு அலுவலக பொறுப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை (08) முற்பகல் ஏற்றுக்கொண்ட வைபவத்தில்…

Read More

44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

சிரியச் சிறுவன் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து கண்ணீர் அஞ்சலி

துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த அகதி சிறுவன் அய்லானுக்கு பிரபல நடிகை உட்பட சமூக ஆர்வலர்கள் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை கூடியுள்ளனர். அய்லான் அணிந்திருந்த சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன் சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தை போலவே அனைவரும் கடற்கரை மணலில்…

Read More