Main News
முறை தவறி நடக்கும் மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை
க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் இன்றுடன் (08) நிறைவடையவுள்ளது. பரீட்சை இறுதிநாளான இன்று பாடசாலைகளின் உள்ளேயும் வௌியேயும் ஒழுக்கத்தைப் பேணுமாறும் அவ்வாறு தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அவ்வாறு முறைதவறி நடக்கும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார். கடந்த வருடம் மாணவர்கள் முறைகேடாக நடந்தமையினால் இவ்வருடம் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பாடசாலை வளாகத்தினுல் முறைதவறி நடக்கும் மாணவர்களின் பெயர்விபரங்களை தனக்கு அனுப்பி…
மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் நியமனம்
– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் இன்று (8) காலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அதன்பிரகாரம் இசுரு தேவப்பிரிய அவர்கள் மேல் மாகாணசபை முதலமைச்சாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதேபோல் தர்மசிறி தஸநாயக்க அவர்கள் வடமேல் மாகாணசபை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை…
கெசினோவுக்கு விரைவில் தடை!
கெசினோ விளையாட்டில் உள்ளுர்வாசிகள் பங்கேற்பது தடைசெய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கெசினோ சூது விளையாட்டுக்களில் வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கெசினோ காரணமாக இலங்கையில் பாரிய கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளமையை பல்வேறு மதக்குருமாரும் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும்
சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் விளக்கமளித்த அவர், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபடாத காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அவர் சீருடை அணிந்திருப்பாராயின், முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை நிறுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ளார் என தெரிவித்தார். குறித்த காவல்துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்படும் போது சாரதி நிறுத்தாமல் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான சாரதிகளுக்கு…
டுபாய் விமானத்தில், நச்சுப் பாம்பு!
துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று பிடிபட்டதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் பிரதேச காடுகளில் வாழும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகை விஷப்பாம்பு ஆப்பிரிக்க நாடுகள், ஓமன், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படும். இந்நிலையில், இந்த விஷப் பாம்பு எவ்வாறு துபாய் விமானத்தில் புகுந்தது என்பது பற்றி எந்த தகவலும்…
அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு ‘அய்லான் தீவு’ என பெயர் சூட்டுவேன்
அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார். தான் வாங்கும் தீவிற்கு பலியான 3 வயது சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார். துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்கள் உலகையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைத் தளங்களில் பலர்…
வசிம் தாஜூதீன் பயன்படுத்திய, கைத்தொலைபேசி மீட்பு
சந்தேகத்துக்குரிய மரணத்தை தழுவிய, ரக்பீ வீரர் வசிம் தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளார் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு தாஜூடீன் கொழும்பில் வைத்து விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த மரணம் விபத்தால் அல்ல. கொலை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் குறித்த காலத்தில் நாரஹேன்பிட்டியில் உள்ள விருந்தினர் உபசரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் தமது மகனுக்கு தாஜூடீன் பயன்படுத்திய தொலைபேசியை…
அராபியர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – மங்கள
அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழில்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையித் அல் நயான் உடனான சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் சொர்க்காபுரியாக இலங்கை மாற்றமடைய…
பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்பு -அமைச்சர் மனோ கணேசன்
சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்புக்கு ஒப்பானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிட்டது. ஆனால் சிங்கள சகோதரர்கள் மிகச் சரியான பதிலை அந்த அமைப்புக்கு வழங்கிவிட்டார்கள். எனவே அதனைப் பற்றி கருத்துக் கூற…
ஹெம்மாதகம பகுதியை தீ வைத்து எறிப்போம்- BBS
– ஊடகப்பிரிவு – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பில் நேற்றைய தினம் ஹெம்மாதகம க்ரீன் வீச் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் கலந்து…
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் நிகழ்வில் பொதுபலசேனா அடாவடி (video)
SLTJ சார்பில் நேற்று முன்தினம்(06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அடாவடியில் ஈடுபட்ட போது பிடிக்கப்பட்ட வீடியோ
ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது நிறைவாண்டு விழா. பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரி
ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது நிறைவாண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக வருகை தரவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிறைவாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ் சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவும் அதேகட்சியிலேயே இருந்தார். எனினும் 1951 ஆம்…
