Main News
கொண்டையாவின் இரத்தமாதிரி ஒத்துப்போகவில்லை
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையாவின் இரத்தமாதிரி குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேயாவை தான் கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹைபிரிட் நீதிமன்றம் இருக்கிறதா?
ஹைபிரிட் நீதிமன்றம் எனும் பொறி முறையொன்று வரப்போகிறதா? அப்படியொன்று இருக்கின்றதா? என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ் மன் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.யிடம் கேள்வியெழுப்பிய போது அவ்வாறு எதுவும் கிடையாது என்று அவர் கையால் சைகை செய்து காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது எழுந்த குழப்பகரமான நிலையின் போது “ஹைபிரிட் நீதிமன்ற விசாரணை” தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது…
மரண தண்டனை இறுதி முடிவல்ல
சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களானது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மிகவும் குறைவாகும். எனவே இப்படியான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை இறுதித் தீர்வாக அமைந்துவிடாது என்று அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின்போது ஆளும் கட்சி எம்.பி.யான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் கொண்டுவரப்பட்டதான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை…
சிறுமி சேயாவை ஜன்னல் வழியாகவே கடத்தினேன் : கொண்டையாவின் சகோதரன்
“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்போது அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் சிறுமியை தூக்கிக்கொண்டு ஒருவாறு அதே ஜன்னலினாலேயே வெளியே வந்தேன். நானே சேயாவின் கொடூர கொலைக்கு பொறுப்பு..” கொட்டதெனியாவ – கடல்கம, அக்கரங்கஹ பிரதேசத்தின் சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான கொண்டயா எனப்படும் துனேஷ் பிரிய சாந்தவின் மூத்த சகோதரன் சமன் ஜயலத் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஒரு…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk. மேற்படி இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 158 -ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி 156 –அநுராதபுரம், பொலன்னறுவை 155 –பதுளை, மொனராகலை, அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம் 153 –வவுனியா, திருகோணமலை, நுவரெலியா –
அரசியல் தீர்வே புதிய அரசின் முதல் இலக்கு : ஜப்பான் நாடாளுமன்றில் ரணில்
இலங்கையின் தற்போதைய அரசு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு ஜப்பான் அரசு உதவிக்கரம் நீட்டும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நாடாளுமன்றில் தெரிவித்தார். இலங்கையில் தேசிய ஒற்றுமை, மத, இன ரீதியாக உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே புதிய அரசின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்…
போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் -அமைச்சர் றிஷாத் சந்திப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கை்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் இதன் போது பிரதி வெளியுறவு அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக தென் இந்தியாவில் போலாந்து முதலீடுகள் தொடர்பில் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் இலங்கையில்…
மக்காவில் காணாமல்போன இலங்கையரின் ஜனாஸா கண்டுபிடிப்பு
– இக்பால் அலி – புனித ஹஜ் யாத்திரைக்காகச் சென்று காணாமற் போனதாகப் பேசப்படும் தம்பதிகளில் கணவருடைய ஜனாஸா இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த அபூபக்கர் அப்துல் அஸீஸ் மற்றும் அவரது மனைவி ரொசான் ஹாரா அப்துல் அஸீஸ் ஆகிய இருவரும் அங்கு காணமாற் போனதாக பேசப்பட்டு வந்தது. இவர்களை தேடும் நடவடிக்கையில் ஹஜ் குழு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின்…
‘ஆண்மை நீக்கம்’ செய்யுங்கள் -வாசுதேவ நாணயக்கார
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவளிக்க முடியாதெனத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு ‘ஆண்மை நீக்கம்’ செய்யுமாறு ஆலோசனையொன்றையும் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆலோசனை முன்வைத்தார் வாசுதேவ நாணயக்கார.
பலாங்கொட நகர சபைக்கு சர்வதேச விருது
ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தில் ஆசிய பசுபிக் நகர நிர்மாண திட்டம் 2015 போட்டியில் ஜூரியின் விஷேட விருது பலாங்கொட நகர சபைக்கு கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஜூரிஸ் விஷேட விருதுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது. குறித்த விருது யூ.என். ஹெபிடாட் அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடியிருப்பு சங்க நன்கொடை நிதியினைப் பயன்படுத்தி பலாங்கொட நகரத்தின்…
இன்டிபென்டன் ஆர்கேட் கட்டடத்தில் உள்ள மீன்களைப் பராமரிக்க 300 இலட்சம் ரூபா தேவை
சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையிலுள்ள இன்டி பென்டன் ஆர்கேட் கட்டடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் தொட்டியில் உள்ள மீன்களை பராம ரிப்பதற்கு வருடாந்தம் 300 இலட்சம் ரூபா தேவைப் படுகின்றது. ஒரு மீன் 65 ஆயிரம் ரூபா பெறுமதியானது. குறித்த மீன்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இவ்வாறான நகர அபிவிருத்திகளையே முன்னைய அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் எமது அர சாங்கத்தில் மேல் மாகாணத்தை பாரிய நகரமாக…
உலக வங்கி, நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரவி
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெரு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரும் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த மாநாடுகளின் 188…
